×
 

நாகர்கோவில் காசியை மிஞ்சிய மயிலாடுதுறை மன்மதன்... கல்யாணமான பெண்களே டார்க்கெட்... லிஸ்டில் 10 பெண்கள்..!

ஆசை வார்த்தை பேசி மயக்கி எல்லை மீறுவதோடு வீடியோ பதிவு செய்து பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை

மயிலாடுதுறைஅருகே திருமணமான பெண்களைமட்டுமே குறிவைத்து ஏமாற்றி நகை,  பணம் பறித்த ஜாகிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசை வார்த்தை பேசி மயக்கி எல்லை மீறுவதோடு வீடியோ பதிவு செய்து பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதற்கு ஜாகிர் உசேன் குடும்பமும் காரணம் என இஸ்லாமிய பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை, பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் 28 வயதான ஜாகிர்உசேன். இவர் தர்காக்களில் சந்தனம் பூசு விழாவின்போது குடும்பத்தாருடன் தரைக்கடை அமைத்து ஃபேன்சி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். தன்னிடம் பொருள் வாங்கும் இஸ்லாமிய பெண்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களைப் பற்றி அறிந்து கொள்வார். அவர்களில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமான பெண்கள்தான் ஜாகீர் உசேனின் டார்கெட்.

அந்த பெண்களிடம் ஜாகிர் உசேன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை ஆசையாக பேசுவாராம். அதில் மயங்கும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுடன், அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு விரட்டியடிப்பதாக கூறப்படுகிறது. ஏமாந்த பெண்கள் நியாயம் கேட்டால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி அனுப்புவாராம் ஜாகீர். மானம் பறி போய்விடும் என நினைக்கும் பொறுத்துக் கொண்டு பல பெண்கள் ஜாகிர் உசேன் மீது புகார் அளிக்காமல் தவிர்த்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஆல் பாஸ்’ முறை ரத்து.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

அப்படி பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர்தான் மயிலாடுதுறை மாவட்டம், திருவந்தளுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஷிபானா ஜாஸ்மின். சென்னையில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, ஷிபானாவின் நண்பர் மூலம் ஜாகிர் உசேன் அறிமுகமாகியுள்ளார். கணவரை பிரிந்தவரான ஷிபானாவிடம் நட்பாக பழகி வந்த ஜாகிர் உசேன், அடுத்து அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் மனதை மயக்கியுள்ளார். அதனை நம்பி ஷிபானாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம், 14 சவரன் நகையை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார் ஜாகீர் உசேன்.

இதற்கு முன்பு கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜாஸ்மினை சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் இந்த காமுகன். இதை யாரிடமும் கூற வேண்டாம். நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என  ஜாஸ்மினிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளான். அதையும் மீறிச் சொன்னால் உனது ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.

கடந்த மார்ச் மாதம் ஷிபானாவை திருவாவடுதுறைக்கு வரச்சொல்லி அங்கும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் ஜாஸ்மின் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ஜாகீர் உசேனும், அவனது குடும்பத்தினரும் ஷிபானாவுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது கர்ப்பத்தை கலைத்துள்ளனர். ஜாஷ்மினை கடுமையாக அடித்து, உதைத்து விரட்டியுள்ளனர். இதுகுறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடத்தி ஜாகீர் உசேன், ஷிபானாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று மீண்டும் கொடுமைப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர்.

 ஜாகீர் உசேன் செல்போனில் பல பெண்களின் ஆபாச படங்களும், செல்போன் எண்களும் இருந்துள்ளது. இது குறித்து விசாரித்தபோது இவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. கடந்த நவம்பர் மாதம் ஷிபானா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதற்கிடையே தேரழுந்தூர் பகுதியை சேர்ந்த திருமணமான உறவுக்காரண பெண்ணையும்,  ஜாகிர் உசேன் திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை, பணம் அவரது தாயார் பெயரில் இருந்த வீட்டின் பத்திரம் ஆகியவற்றை பிடிங்கிக்கொண்டு விரட்டி அடித்துள்ளான்.  அவற்றை மீட்டுக் கொடுக்க சொல்லி கண்ணீர் மல்க அப்பெண்மணி வாட்ஸ் அப்பில் பேசி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்ததால் ஜாகிர் உசேன் நாகை மாவட்டம் திட்டச்சேரிக்கு வசிப்பிடத்தை மாற்றியுள்ளான்.

இந்த நிலையில், திருமணமான பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷிபானா ஜாஸ்மின், தமுமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோசடி செய்த நகை, பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்து உண்மை நிலையை கண்டறிந்து ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி, ஜாகீர் உசேனை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்திய தண்டனைச் சட்டம் 417, 420, 506 (i), 354(A) பா.நி.சட்டம் 69 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜாகிர் உசேனைக் கைதுசெய்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி .. சசிகலா சபதம் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share