அம்பானியின் பிரம்மாண்ட வன்தாரா.. சிங்கக்குட்டிகளை கொஞ்சி பிரதமர் மோடி உற்சாகம்..!
வனவிலங்குகளுக்கான வன்தாரா என்ற பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வன்தாரா என்ற பெயரில் குஜராத் ஜாம் நகரில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தை தொடங்கி உள்ளார்.
இதையும் படிங்க: காட்டு சிங்கங்களை நேருக்கு நேர் சந்தித்த மோடி..! ஸ்டைலா கெத்தா போஸ்.!
வன்தாரா மையம், ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையான வன விலங்குகள் வாழிடம் போன்று இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.
ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமான வன்தாராவில், வன உயிரியல் நிபுணர்கள் உட்பட 2,100 பேர் பணியாற்றுகின்றனர்.
விலங்குகள் நலத்தை பாதுகாக்கும் அதே வேளையில், வன விலங்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் இந்த மையம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வன்தாரா பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா உள்ளிட்டோறும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். காப்பகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி சிங்கக் குட்டிகள், ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்டவற்றிக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
பின்னர், அவர் வன்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனையும் பார்வையிட்டார். அங்கு, கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., சி.டிமற்றும் ஐ.சி.யு., உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: ஆளுநரே அரசியல் செய்ய அண்ணாமலை இருக்காரு.. அவரோடு ஏன் போட்டி.? கச்சத்தீவு கருத்துக்கு அமைச்சர் ரகுபதி ஆவேச பதிலடி!