திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!
திமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா? என்று காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருப்தார். அதில்,"மும்மொழிக் கொள்கை என்பது மொழி திணிப்பு, கலாச்சார ஒழிப்பு" என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் மும்மொழி, யுபிஎஸ்சி தேர்வு என வேறு பல கருத்துகளையும் சசிகாந்த் செந்தில் வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். சசிகாந்தின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர் வினையாற்றி இருக்கிறார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,"ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.
நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி தி.மு.க.வுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து தி.மு.க.,வினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.,வைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?" என்று அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: காமராஜர் பெயரில் கை வைத்த திமுக.. கூட்டணி கட்சிக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த கதர்ச்சட்டைகள்..!
இதையும் படிங்க: இந்துக்கள் கோபப்படுவார்கள்: ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகப் பேசாதீர்கள்…. ராகுலுக்கு அட்வைஸ்