×
 

நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்..! போலீசாருடன் மல்லுக்கட்டிய ஹெச். ராஜா..!

நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன், நான் என்ன குற்றவாளி என தன்னை கைது செய்ய வந்த போலீசாருடன் ஹெச். ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

ஆனால், காவல்துறை தரப்பில் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி வந்த பாஜக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மனச விட்டுறாதீங்க அண்ணா..! ஷிகான் ஹுசைனிக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை..!

சென்னை சாலிகிராமத்தில் இருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை செளந்தரராஜனை போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும், சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் சென்ற அண்ணாமலையை அக்கரை அருகே போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதேபோல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் சட்டமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு போராட்டத்தில் ஈடுபட வந்த ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கிரிமினலை ஜெயில் உள்ளேயே சல்யூட் போட்டு வைத்திருந்தீர்கள், தற்போது அந்த கிரிமினல் மந்திரியாக மீண்டும் வந்து விட்டார். நாய் ஏத்துற வண்டியில் நான் ஏற மாட்டேன். இந்த வண்டியில் என்னை ஏன் ஏற சொல்கிறீர்கள். நான் என்ன குற்றவாளியா என கேள்வி எழுப்பினார். எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? செந்தில் பாலாஜியை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா, தைரியம் உண்டா என போலீசாருடன் எச். ராஜா வாக்குவாதம் செய்தார்.

மேலும், செந்தில் பாலாஜி ஒரு கிரிமினல், கொள்ளைக்காரர், அவரை கைது செய்ய மாட்டீர்கள்., எங்களை கைது செய்கிறீர்களா, அதை அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார். தொடந்து ஹெச்.ராஜாவை கைது செய்த போலீசார் அரசு பேருந்தில் அழைத்து சென்று அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் எழும்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையும் படிங்க: மிஸ்டர் அண்ணாமலை எல்லாத்துக்கும் காரணம் நீங்க! விளாசிய சசிகாந்த்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share