ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!
கோவை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது, தொடர்ந்து மாலையில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய துவங்கியது் குறிப்பாக இரவு முழுவதும் பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதே போல் அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் டார்கெட்... அடித்துப் பொளக்கப்போகும் மழை...!
இதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் ஒரே நாளில் 7.8 செ.மீ மழை பதிவானது. சூலூர் பகுதியில் 7.6 செ.மீ அன்னூரில் 7.5 செ.மீ மழை பதிவானது. அதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியில் 4.8 செ.மீ மழை பதிவானது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் குறைவான அளவில் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 72.16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் காலை நேரத்திலும் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோவையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு கோடையின் போது சென்னைக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கோவையும் தகித்துக் கொண்ட்டிருந்தது. தற்போது ஆரம்பத்திலேயே கோவையில் நிலவும் வெப்பத்தை கனமழை பெய்து குறைத்துவருவது கோவை மக்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?