×
 

பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!

கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்  தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர்.

''தமிழ்­நாடு ஆளு­நர் ரவி, நிறுத்தி வைத்த 10 மசோ­தாக்­கள் சட்­டம் ஆவ­தாக தமிழ்­நாடு அர­சின்,               அர­சி­த­ழில்   கம்­பீ­ர­மாக அறி­விக்­கப்­பட்டு விட்­டது. உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கிய மாபெ­ரும் தீர்ப்­பின்              அடிப்­ப­டை­யில் இது    நடந்­துள்­ளது'' எனக் கொக்கரிக்கிறது திமுக அரசு.

இதுகுறித்து முரசொலி நாளிதழில், 'ஆளுநர் இல்லாமலே' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், ''தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் ஆளு­நர் கையெ­ழுத்து இல்­லா­மல் 10 மசோ­தாக்­கள்           நிறை­வே­றி­யது என்ற மகத்­தான சாத­னை­யைச் செய்து விட்­டார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.      ஆளு­ந­ரால் நிறுத்­தி­ வைக்­கப்­பட்ட 10 மசோ­தாக்­க­ளுக்கு சிறப்பு அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி               உச்­ச­நீ­தி­மன்­றம்    ஒப்­பு­தல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்­தது.

“அர­ச­மைப்­புச் சட்­டம் 142 ஆவது பிரி­வின்படி உச்சநீதி­மன்­றத்­துக்கு அதி­கா­ரம் இருக்­கி­றது. இந்த           அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட மசோ­தாக்­களை ஒப்­பு­தல்                       தரப்­பட்­ட­வை­யாக நாங்­கள் அறி­விக்­கி­றோம். நீண்ட கால­மாக மசோ­தாவை நிலு­வை­யில் வைத்­தி­ருந்த ஆளு­நர், அதனை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­த­தன் மூல­மாக நேர்­மை­யற்ற செயல்             செய்­துள்­ளார். 

இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!

இது­போன்று பஞ்­சாப் அரசு தாக்­கல் செய்த வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் ஒரு தீர்ப்பை தந்­தது. அன்­றைய தினம், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு தமிழ்­நாடு ஆளு­நர் திருப்பி அனுப்பி இருக்­கி­றார். எனவே,                          மசோ­தாக்­கள் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு எப்­போது தமிழ்­நாடு அர­சால் அனுப்பி வைக்­கப்­பட்­டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றன”என்று உச்ச நீதி­மன்ற            நீதி­ய­ர­சர்­கள் ஜே.பி.பார்த்­தி­வாலா, ஆர்.மகா­தே­வன் அமர்வு தீர்ப்பு அளித்­தது.

இந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில்­தான் 10 மசோ­தாக்­க­ளும் அர­சி­த­ழி­லில்வெளி­யாகி இருக்­கின்­றன. மசோ­தாக்­களை ஆளு­ந­ருக்கு தமிழ்­நாடு அரசு அனுப்­பி­வைத்த 2023 நவம்­பர் 13- ஆம் தேதி­யில் ஒப்­பு­தல் அளித்­த­தாக கருத வேண்­டும் என அர­சி­த­ழில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் தமிழ்­நாடு அர­சுக்கு உள்­ளது என்ற சட்­டம் ஒப்­பு­தல் பெறப்­பட்டு விட்­டது. இனி­மேல் பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும்                          அதி­கா­ரம் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் வச­மாகி உள்­ளது.

தன்னை ஏதோ இந்த நாட்­டின் வேந்­த­ரைப் போல நினைத்­துக் கொண்டு ஆடிக் கொண்­டி­ருக்­கி­றார் ஆளு­நர். அதற்கு உச்ச நீதி­மன்­றம் தடுப்­பணை போட்­டுள்­ளது. பத்து மசோ­தாக்­க­ளுக்கு உச்ச                 நீதி­மன்­றம் எப்­படி ஒப்­பு­தல் வழங்­க­லாம் என்று சில அதிமேதா­வி­கள் சொல்­லத் தொடங்கி                      இருக்­கி­றார்­கள். ‘உன் மூக்­கைத் தொடு’ என்­றால், ஓடிப் போய் ஆளு­ந­ரின் மூக்­கைத் தொடும் ரகங்­கள் இவை.

உச்ச நீதி­மன்­றம் தனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தைப் பயன்­­படுத்­தித்­தான் இந்த முடிவை                எடுத்­துள்­ளதே தவிர தன்­னிச்­சை­யாக அல்ல. பேர­றி­வா­ளன் விடு­தலை விவ­கா­ரத்­தி­லும் அர­ச­மைப்பு விதி 142 தான் பயன்­ப­டுத்­தி­யது உச்­ச­நீ­தி­மன்­றம். மாநில அர­சின் 161 ஆவது பிரி­வின் உரி­மை­யைக் காக்க   நாங்­கள் 142 ஆவது பிரி­வைப் பயன்­ப­டுத்­து­கி­றோம் என்­ப­து­தான் பேர­றி­வா­ளன் வழக்­கில்                      நீதி­ப­தி­க­ளின் இறுதி முடிவு ஆகும்.

“அர­சி­யல் சாச­னம் பிரிவு 142 இன் படி முழு­மை­யான நீதியை வழங்­கு­ வ­தற்­குத் தேவை­யான எந்­தத் தீர்ப்­பை­யும் அல்­லது உத்­த­ர­வை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­க­லாம்” என்று உச்ச நீதி­மன்­றத்­தின் அந்த அமர்வு சொன்­னது. அதைத்­தான் இந்த அமர்­வும் சொல்லி இருக்­கி­றது. சட்­டப்­படி யார் நடக்­க­                மாட்­டார்­களோ, அவர்­கள் விஷ­யத்­தில் சட்­டப்­படி உச்­ச ­நீ­தி­மன்­றம் நடக்­கும் என்­பதை உறுதி            செய்­துள்­ளது உச்ச நீதி­மன்­றம்.

415 பக்­கங்­கள் கொண்ட, பர்த்­தி­வாலா, - மகா­தே­வன் அமர்வு தனது தீர்ப்­பில், 10 சட்ட மசோ­தாக்­க­ளுக்கு சட்ட அங்­கீ­கா­ரம் அளித்­தது ஏன் என்­பதை உச்ச நீதி­மன்­றம் விளக்­கி­யி­ருக்­கி­றது. “அர­ச­மைப்­புச் சட்ட அதி­கார அமைப்­பு­கள் என்­பவை அர­ச­மைப்­புச் சட்­டத்­தால் படைக்­கப்­பட்­டவை. அத­னால்                    பரிந்­து­ரைக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குக் கட்­டுப்­பட்­டவை. எந்­த­வொரு அதி­கா­ர­மும், அதன்                            அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ வ­திலோ அல்­லது துல்­லி­ய­மா­கச் சொன்­னால், அதன் கட­மை­களை நிறை வேற்­று­வ­திலோ, அர­ச­மைப்­புச் சட்­டக் கட்­டுப்­பாட்டை மீற முயற்­சிக்­கக்­கூ­டாது. ஆளு­நர்                அலு­வ­ல­க­மும் இந்­தக் கட்­ட­ளைக்கு விதி­வி­லக்­கல்ல.

அர­ச­மைப்­புச் சட்ட வரம்­பு­க­ளுக்கு அப்­பால் செல்ல எந்­த­வொரு அதி­கார அமைப்­பும் முயற்­சிக்­கும் போதெல்­லாம், நீதித்­து­றை­யா­னது சீராய்வு அதி­கா­ரத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தன் மூலம் அர­ச­மைப்­புச் சட்ட ரீதி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குள் அதி­கா­ரத்தை மீண்­டும் கொண்டு வர­வும்,                         அர­ச­மைப்­புச் சட்­டக் காவ­ல­ரா­கச் செயல்­ப­ட­வும் இந்த நீதி­மன்­றத்­திற்கு பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்               பட்­டுள்­ளது.

அர­ச­மைப்­புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உள்ள எங்­கள் அதி­கா­ரத்தை நாங்­கள் சாதா­ர­ண­மா­கவோ அதைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­திக்­கா­மலோ பயன்­ப­டுத்­த­வில்லை. முழு­மை­யான நீதி வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான ஒரே வழி இது­தான்.”என்­றும் நீதி­ப­தி­கள் தெளி­வா­கச் சொல்லி இருக்­கி­றார்­கள். எனவே நீதியை நிலை­நாட்டி இருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். அதன்­படி சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்­றப்­  பட்ட மசோ­தாக்­க­ளும் நிறை­வே­றி­விட்­டன. இதில் என்ன சிறப்பு என்­றால் ,‘ஆளு­ந­ரின் கையெ­ழுத்து இல்­லா­மல்’. அது­தான் சிறப்பு.

கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்                      தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர். ஆளு­நர்­களை அவர்­கள் பத­வி­யில் உட்­கார வைத்­துக் கொண்டே ‘தகுதி நீக்­கம்’ செய்­வது என்­பது இது­தான்'' எனத் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share