×
 

7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்!

அன்புக்கரசு என்ற 7-ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு

அரசு பள்ளி மாணவர் அன்புகரசின் அன்புக்கு கட்டுப்பட்டு புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைத்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய நிதிஅமைச்சர் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து பள்ளிக்கு வருகிறாயா, ரொம்ப சிரமமாக உள்ளதா என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிதியமைச்சரை சந்தித்த சிறுவன் நானும் ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரல என்று நிதியமைச்சரிடம் தெரிவித்தான். 

இதையும் படிங்க: பிரதமர் விழாவைப் புறக்கணிப்பதா.? மாற்றத்துக்கான நேரம் தொடங்கிவிட்டது.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை!

சற்றும் எதிர்பார்க்காத நிதியமைச்சர் அந்த சிறுவனின் பெயரை கேட்டார் அன்புக்கரசு என்று சொன்னவுடன் உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு முதல் பஸ் விட்டு உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம் என்று கலகலப்பாக பேசினார் அந்த வீடியோ சோசியல் மீடியாக்கள் மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பாகி வைரலானது.


இந்த நிலையில் சிறுவன் அன்புக்கரசுவின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று அந்த சிறுவனின் கிராமத்திற்கு நேரடியாக சென்று சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும் அரசு பேருந்தை ஆத்திகுளம் கிராமத்திற்கு டச்சிங் செய்து வர புதிய வழித்தடத்தில் பேருந்தை அந்த சிறுவனை வைத்து கொடியசைத்து துவக்கி வைத்து அழகு பார்த்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. 

மேலும் கிராம மக்களிடம் அன்புக்கரசு கோரிக்கை வைத்ததன் பேரில் தற்போது பேருந்து இயக்கப்பட்டுள்ளது என பெருமையாக பேசினார். பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவரும்  அரசுப் பேருந்தில் ஏறி மகிழ்ந்தனர். இப்போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நிதியமைச்சர் தங்கம்தென்னரசு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்த மாணவர் அன்புக்கரசுவை தனது மடியில் அமர வைத்து பேருந்தில் சிறிது தூரம் வரை பயணம் செய்து மகிழ்ந்தார்.

முன்னதாக நிதி அமைச்சரை பள்ளி மாணவர்கள் அனைவரும் ரோஜா பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி மாணவர்களை வைத்து புதிய வழித்தடத்தில் பேருந்துவை இயக்கிய நிதி அமைச்சரின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share