குடும்ப பிரச்னையால் காவலர் கொலை.. அன்று அவர் பணிக்கே வரவில்லை.. அமைச்சர் ரகுபதி விளக்கம்..!
மதுரையில் காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக அந்த கொலை நடந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பாக தமிழக மக்கள் நலனுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை அமைதி பூங்காவாக நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 20 கால வரலாற்றை எடுத்தால் கடந்த 2012 ஆம் ஆண்டு1943 குற்றசம்பவங்களும், 2013 ஆம் ஆண்டு 1927 குற்றசம்பவங்களும், 2019 ஆம் ஆண்டு 1745 குற்றசம்பவங்களும் நடந்து இருப்பதாகவும் அதனை ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு 1540 குற்றச்சம்பவங்கள் தான் நடைபெற்று இருப்பதாகவும் சட்டதுறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். குற்றசம்பவங்கள் எங்களின் ஆட்சியில் குறைவுதான் எனவும் அவர் கூறினார்.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ஏதோ ஒரு சில இடத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை குறிப்பிட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போன்று எடப்பாடி பழனிசாமி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அவர் பேசுகையில் தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழில் நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் இது பிடிக்காமல் இபிஎஸ் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் அமைதி பூங்காவாக இல்லை என்ற தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு போன் போட்ட அமித் ஷா... டெல்லி வரச் சொன்ன காரணம் இதுவா?
அவருடைய ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி சம்பவம் தர்மபுரி சம்பவம் போன்று இந்த ஆட்சி காலத்தில் எதுவும் இப்போது நடைபெறவில்லையே? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நேரமில்லா நேரத்தில் எதிர் கட்சிகள் பேசுவதற்கு அவருடைய ஆட்சி காலத்தில் அரை மணி நேரம் முன்பாக என்ன பேச வேண்டும் என்பதை கொடுக்க சொல்லி இருந்தார் அதன்படி தான் தற்போதும் செயல்படுவதாகவும் ஆனால் எதிர்க்கட்சி கொறடா சட்டப்பேரவை துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சபாநாயகர் சந்தேகத்தை காவல்துறையினரை பற்றி பேச வேண்டும் அதற்கு ஜீரோ அவரில் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
எந்தப் பிரச்சினை குறித்து பேச போறோம் என்று முன்பே தெரிவிக்காத காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் , அவர் முன்பு எந்த பிரச்சினையை பற்றி பேச வேண்டும் என்று கூறினால்தான் அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ அந்த துறை சார்ந்த பதில்களை தயார் செய்வார்கள். இந்த அரசை பொருத்தவரையில் ஆளும் கட்சிகளை விட எதிர்க்கட்சிகளுக்கு அவையில் பேச அதிக வாய்ப்பு கொடுப்பதாகும், வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் கூட முதலமைச்சர்கிட்ட எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதாகவும், என்ன பிரச்சனை என்று சொல்லாமல் பதில் கூறுங்கள் என்றால் எவ்வாறு கூற முடியும்.
அவர்கள் எழுப்பும் பிரச்சனைக்கு முதலமைச்சரிடம் பதில் தயாராக இருப்பதாகவும் , சட்டப்படி கேட்டிருந்தால் அனைத்திற்கும் பதில் கிடைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டார். தாமதமாக நீங்கள் வந்து பிரச்சினை விவாதிக்க வேண்டும் என்று கேட்டதற்கு விவாதிக்க முடியாது என்று கூறியது குற்றமா? தண்டனை கூறியதா? அதற்கு இவ்வாறு அசிங்கப்படுத்துவது அவமரியாதை செய்வதாக சட்டமன்றத்தை என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
உசிலம்பட்டி காவலர் படுகொலை சம்பவம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி குடும்ப பிரச்சினை காரணமாக அந்த கொலை நடந்திருப்பதாகவும், அவர் அன்று பணிக்கு வரவில்லை தோட்டத்தில் இருந்தார் எனவும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யப்படுவார்கள். மேலும் ஈரானிய கொள்ளையர்கள் 3 மணி நேரத்தில் தமிழக காவல்துறை பிடித்துள்ளார்கள் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்காமல் இதுபோன்று அதிமுகவினர் பேசுவதால் காவலர்களுக்கு மனசோர்வு ஏற்படுத்துகிறார்.
மேலும் பேசிய அவர் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி ஒரு பொய்யான தகவலை தருவதாகவும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அந்த மருத்துவர் கடத்தப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் இதுபோன்ற பேசுவதன் மூலம் பெண்களை வீட்டை விட்டு வெளியே வராமல், வேலைக்கு செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தடுக்கிறார் என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷா போட்ட ட்வீட்.. உருட்டல், மிரட்டல் எங்ககிட்ட வேணாம்.. சேகர்பாபு எச்சரிக்கை..!