×
 

தமிழகத்தில் இரண்டாவது இடத்துக்குதான் இப்போ போட்டி.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சரவெடி..!!

தமிழகத்தில் இப்போது இரண்டாவது இடத்துக்குதான் யார் வருவது என்பதில் போட்டி நடந்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கெளத்தூரில் நடைபெற்ற ரமலான் திருநாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.  “மத நல்லிணக்கத்தை விரும்புகிற இஸ்லாமிய சகோதரர்களையும் திமுகவையும் எப்போதும் பிரிக்க முடியாது. அதனால்தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது போன்ற விழாக்களை பலரும் நடத்துவார்கள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு தீங்கு நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டம் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களுக்கு முதல் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருப்பது திமுகதான்.

இப்போதுகூட வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும் கூட்டுக்குழுவிலும் திமுக சார்பில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.
இரண்டு நாட்களுக்கு இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றி, திமுக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம்.

இந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய, உலக அளவில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அமைப்புகளும் பாராட்டுகின்றன. ஆனால், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றகூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பங்கேற்கவில்லை. ஏன் என்று உங்களுக்கே தெரியும். இரவோடு இரவாக திட்டம் தீட்டி, விமானத்தைப் பிடித்து அவர் டெல்லிக்கு போனார். அங்கு இறங்கி கொள்ளையடிக்க போகிறவர் மாதிரி நான்கு காரில் மாறி மாறி போயிருக்கிறார். அப்படி சென்றவர் இந்தச் சட்டத்தை கொண்டுவரப்போகிற அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று தெரிந்தும் அவர் வரவில்லை.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை விடாமல் விரட்டிய இளைஞர்கள்... துரத்தி துரத்தி வாக்குவாதம்...!



இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான். இதில் வேடிக்கை என்னவென்றால் ’அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி’ என்று சொல்லிக்கொண்டிருந்த எதிர்க் கட்சி தலைவர், இன்று ’நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி’ என்று சொல்லுகிறார். இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இப்போது இரண்டாவது இடத்துக்குதான் யார் வருவது என்பதில் அவர்களுக்குள் போட்டி நடந்து வருகிறது. மக்களை பொறுத்தவரை திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சி. நான் இதை மமதையில் சொல்லவில்லை. மக்களின் ஆதரவை வைத்தே சொல்கிறேன்.

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு போனதைப் பற்றி பேசினேன். அப்போது ’உங்கள் கூட்டணி குறித்து எதுவானாலும் பேசிவிட்டு வாருங்கள். ஆனால், இருமொழி கொள்கை குறித்து பேசிவிட்டு வாருங்கள்’ என்று சொன்னேன். அவர் அங்கு சந்தித்து பேசிவிட்டு, இருமொழி கொள்கை குறித்து அழுத்தமாக பேசியதாக சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். அதே போல் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக அவர் பேச வேண்டும். அப்போதும் கார் மாறி மாறி போய் பேசுங்கள் என்று  சொன்னேன். இப்படி பயந்து அஞ்சி நடுக்கும் செயலைத்தான் எதிர்க்கட்சி இன்று செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதை திமுக என்றும் எதிர்க்கும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: கிராமசபை கூட்டத்திற்கு அழைத்து திமுக செய்த கோல்மால்... அமைச்சர் KKSSR -ஐ ஓடவிட்ட பெண்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share