×
 

5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை பழம்... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தைப்பூசத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழத்தை திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார்கள் ஏலம் விட்ட நிலையில் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

தைப்பூசத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழத்தை திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார்கள் ஏலம் விட்ட நிலையில் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகம் என்ற ஒரு சமூகத்தினர் உள்ளனர். இந்த சமூகத்தினர் மேல்முகம் என்ற மேல சீமை, நடுமுகம் என்ற நடுசீமை, கீழ முகம் என்ற கீழ சீமை என்று உள்ளனர். குறிப்பாக மேல சீமையில் கீரனூர் ஆரியூர் அன்னவாசல் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர்களும்  நடு சீமையில் ஆலங்குடி மறமடக்கி வடகாடு கரம்பக்குடியும் கீழ சீமையில் நெடுவாசல் நெய்வேலி பிலாவிடுதி காடுவெட்டிவிடுதி ஆகிய பகுதிகளிலும் உள்ளனர். மேலும் மொத்தம் மூன்று சீமைகளில் உள்ளவர்கள் 12 ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த 12 ஊர்களில் இருந்தும் இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் திருச்சி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வர்த்தக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பணி செய்யவும் சென்று அங்கேயே வசித்தும் வருகின்றனர். 

இந்நிலையில் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூச நாளை விமர்சியாக கொண்டாடும் வகையில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை மூன்று தினங்கள் பழனியில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: வெண்ணை மலை முருகன் கோயில் தேரோட்டம்... மக்களோடு மக்களாக தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...!

அதேபோல் இந்த ஆண்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் பழனிக்கு சென்று தைப்பூசத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். 

இந்நிலையில் தான் இவர்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அன்னதானம் சமைத்து வழங்கும்போதும் சாமி தரிசனம் உள்ளிட்டவற்றை செய்யும் பொழுது ஒவ்வொரு எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த ஆண்டும் அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்த நிலையில் அந்த எலுமிச்சம் பழத்தை இன்று பழனியில் பெரியநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்கு சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விட்டுள்ளனர். இந்த ஏலத்தில் அதே திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு பழங்களை ஏலம் எடுத்துள்ளனர். 

குறிப்பாக காலை உணவு இரவு உணவு மதிய உணவு உள்ளிட்ட உணவு சமைத்து அன்னதானம் செய்யப்படும் போது செய்யப்பட்ட பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் 16,000 முதல் 40,000 வரை ஏலம் போன நிலையில் ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை  செய்த ஒரு அபிஷேக எலுமிச்சம் பழத்தை ஏலம் விட்ட நிலையில் அந்த எலுமிச்சம் பழத்தை தங்கள் வசப்படுத்திக்கொள்ள அந்த ஏலத்தில் கலந்து கொண்ட பலரும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் நான்கு லட்சம் என ஏலம் கேட்டனர். 

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் 5 லட்சத்து 9 ஆயிரம் என்று கூறி அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை ஏல எடுத்து கெத்து காட்டியது பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் ஒரு எலுமிச்சம் பழம் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என விற்கப்பட்டு வரக்கூடிய நிலையில் பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த அபிஷேகம் பழம் என்ற காரணத்தினால் ஒரு எலுமிச்சம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதா என்று தகவல் கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். 
 

இதையும் படிங்க: தைப்பூச திருவிழா 2025... பழனியில் விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share