×
 

ஹிந்தியை ஏற்க மறுப்பது என்ன லாஜிக்? கிழித்தெடுத்த பவன் கல்யாண்!

பணத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய மட்டும் ஏன் அனுமதிக்கிறார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்கள் வலுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை செயல்பாட்டில் உள்ளது. இதனிடையே மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மொழிப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்துள்ளது. 

இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாடு அரசு தொடந்து குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில் நம் நாட்டுக்கு இருமொழிகள் போதாது, பல மொழிகள் அவசியம் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!

ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் காக்கிநாடாவில் நடைபெற்றது. இதில் துணை முதல்வரும், கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், நாட்டுக்கு இரண்டு மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என்றும் மொழியியல் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அது நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டும் அல்லாமல், அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் என தெரிவித்தார். நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது என்று கூறிய பவன் கல்யாண், தமிழக அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள், பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா, இது என்ன வகையான தர்க்கம் என கேள்வி எழுப்பினார்.

மேலும், சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை என பவன் கல்யாண் கூறினார்.

இதையும் படிங்க: குளவிக் கூட்டில் கை வைக்காதீங்க..! ஹிந்தி படிக்க சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.. துரைமுருகன் தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share