சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கு.. ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் திட்டவட்டம்..!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: என்னை எப்படி பதவி நீக்கம் செய்யலாம்..? கொந்தளிக்கும் தாம்பரம் கவுன்சிலர்..!
இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லை, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். காவல் துறை தரப்பில், காவல் துறை தரப்பில், வழக்கை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார்.
இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தந்தத்திற்காக கொன்று எரிக்கப்பட்ட யானை.. குற்றவாளியை விரைந்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!