×
 

செட் எக்சாம் வந்துடுச்சு… ஏற்பாடுகளை தீவிரப்படுத்துங்க.. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்.

கல்லூரி பேராசிரியர் தகுதி தேர்வுக்கான முன்னேற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார்.

ஆசிரியர்களுக்கான மாநில தகுதி தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்றது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வரும் மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் அனைத்து நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் பயிற்சி தேர்வுக்கான இணையதளம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் https://www.trb.tn.gov.in கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி இதுவரை 67,865 தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் கேட்டு தெளிவுபெற 7 பேர் கொண்ட குழுவாக தொலைபேசி வாயிலான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான நேரடி உதவி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து அன்னைத் தமிழை காப்பேன் - முதல்வர் சூளுரை..!

இந்த நிலையில் தேர்வுகளை எந்த தடையும் இன்றி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்வு முன்னேற்பாடுகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் - ஆளுநர் ரவி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share