×
 

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள்.. சபல 'சார்'களுக்கு செக் வைத்த தமிழக அரசு.. குழந்தைகளை காக்க அதிரடி உத்தரவு!

போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும் என்றும் புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அண்மைக் காலமாக பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகள் ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்வி நிறு​வனங்​களில் குழந்தை​களுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயல​கத்​தில் உயர்​நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது.  இதைத் தொடர்ந்து அரசு, தனியார் பள்ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

* கல்வி நிறு​வனங்​களில் குழந்
தை​களுக்கு எதிரான பாலியல் குற்​றங்​களில் ஈடுபடு​வோர் மீது துறைரீ​தியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

* போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​கள், பணியாளர்​களின் பள்ளி, உயர்​கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்​யப்​படும்.

*  புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும்.

* பணியாளர்கள் அனைவரும் ‘குழந்தை பாது​காப்பு உறுதி​மொழி’ ஆவணத்​தில் கையெழுத்​திடுவது கட்டாய​மாகும்.

* அனைத்து பள்ளி மாணவ, மாணவி​களுக்கு ‘சுய பாது​காப்பு கல்வி’ அளிக்​கப்பட வேண்​டும்.

* ஆசிரியர் பட்டய மற்றும் பட்டப்​படிப்பு பாடத்​திட்​டங்​களில் குழந்தை​களுக்கு நடக்​கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடம் சேர்க்​கப்​படும்.



*  போக்சோ வழக்​குகள் தொடர்பான அனைத்து விவரங்களை தொகுக்​க​வும், கண்காணிக்​க​வும் தொடர்பு அலுவலர் நியமிக்​கப்பட வேண்​டும்.

* மாணவிகள் பயணம் செய்​யும் பள்ளி வாகனங்​களில் பெண் உதவி​யாளர்கள் பணி அமர்த்​தப்பட வேண்​டும்.

* இருபாலர்கள், பெண்கள் பள்ளி​களில் உடற்​கல்வி பணியிடங்​களில் ஆசிரியைகளை நியமனம் செய்​ய​வேண்​டும்.


*  விளை​யாட்டு போட்​டிகள், கலை நிகழ்ச்​சிகள், கல்வி சுற்றுலா போன்ற​வற்றுக்கு மாணவிகளை ஆசிரியைகளே அழைத்​துச் செல்ல வேண்​டும்.

* கல்வி நிறு​வனங்​களுக்கு வெளியே முகாம்​களில் தங்கும்பட்சத்​தில் மாணவி​களுடன் ஆசிரியைகள் மட்டுமே தங்குவதை உறுதி செய்​ய​வேண்​டும்.

* மாணவியர் விடு​திக்​குள் வெளிநபர்கள் அனும​திக்​கப்பட கூடாது.விடுதி பராமரிப்பு பணி, பெண் காப்​பாளர்கள் மேற்​பார்​வை​யில் மட்டுமே மேற்​கொள்​ளப்​பட​வேண்​டும்.

* அனைத்து கல்வி நிறு​வனங்​களி​லும் ‘1098’ மற்றும் ‘14417’ ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்பு​ணர்வு பதாகைகள் அமைக்​கப்பட வேண்​டும்.

* அனைத்து பள்ளி​களி​லும் ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் முக்​கியமான இடங்​களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி​செய்ய வேண்​டும்.

* பாலியல் குற்​றங்கள் பற்றி தெரிய​வந்​தால், சம்பந்​தப்​பட்டபள்ளி​யின் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து, மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலுவலருக்​கும் தகவல் தெரிவிக்க வேண்​டும்.

* புகார் அளிக்​கும் மாணவி​களின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது.

* இந்த அனைத்து பரிந்​துரைகளை​யும் அரசு, தனி​யார் பள்​ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​கள் கண்​டிப்பாக பின்​பற்றுவதை சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​கள் உறு​தி​செய்ய வேண்​டும்.

அரசு உத்தரவில் இவ்​வாறு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதையும் படிங்க: தடித்தனமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. டெல்லியை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share