×
 

தப்பிக்கூட இத பண்ணிடாதீங்க..! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய ரூல்ஸ்..!

மாநில அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய விதிமுறை வெளியிட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டது. அதில், தமிழக அரசு திருத்தம் செய்து, புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசின் அனுமதியின்றி அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை பெறக் கூடாது என்றும் திருமணம் உள்ளிட்ட மத சடங்குகளின்போது 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளைப் பெறலாம் இருப்பினும் அதனை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடாது.

இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.

அரசு ஊழியர்கள், எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது., எந்த அரசியல் கட்சிக்கோ, தேர்தலில் எந்த வேட்பாளருக்கோ ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான கருத்துக்களை, அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர் அரசியல் கட்சி அல்லது அமைப்புகளில் இருந்தால் அதனை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தலில் ஓட்டு போடலாம் ஆனால் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவும் வேறு வகைகளில் தலையிடவும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது 

அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது, எந்தவொரு அரசு ஊழியரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவோ கூடாது. அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது, கடமைகளை புறக்கணிப்பதும், போராட்டமாகவே கருதப்படும்.தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

ஒரு அரசு ஊழியர், தனக்கான அரசு பணிகளைத் தவிர, எந்தவொரு அலுவல் சாரா கூட்டத்திற்கோ, மாநாட்டிற்கோ, தலைமை தாங்கவோ, பங்கேற்கவோ உரையாற்றவோ கூடாது என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது. அலுவலகத்திலும், பொது இடங்களுக்கு வரும்போதும், மது அருந்தி விட்டு வரக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புழல் சிறைச்சாலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share