வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூரம்: ரூ.50 லட்சம் 'சீர் வரிசை' கொடுத்தும், ஆசை அடங்காத மாமியார்!
வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூர சம்பவம் உத்தரகாண்ட்டில் அரங்கேறியுள்ளது
நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது என்றாலும் வரதட்சணை கொடுமை போன்ற அவலங்கள் இன்னும் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது.
ஏற்கனவே ரூ 50 லட்சம் வரை நகை ரொக்கம் கார் போன்ற சீர் வரிசையை மனைவி வீட்டில் இருந்து செய்து இருந்தும் மீண்டும் ஆடம்பர கார் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மாமியார் வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த மருமகளை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த இந்த கொடுமையின் உச்சம் என்னவென்றால் யாருமே நினைத்த கூட பார்க்க முடியாத அளவுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றை உருவாக்கக்கூடிய எச்ஐவி கிருமிகளை ஊசி மூலம் அந்த அப்பாவை பெண்ணின் உடலில் செலுத்தியது தான். இப்போது எய்ட்ஸ் நோய் பாதிப்பினால் அந்த பெண் அவதிப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: திமுக அரசை அகற்றணும்.. கூட்டணியிலிருந்து வெளியே வாங்க.. சிபிஎம், விசிகவுக்கு பாஜக பகிரங்க கோரிக்கை!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் பிரன் காலியர் காவல் நிலையத்துக்குட்பட்டது ஜஸ்ஸா வாலா என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக்.. இவருக்கும் சோனல் சைனி என்ற இளம் பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, காஸ்ட்லியான கார், நகைகளை பெற்றோர் வீட்டில் தந்திருக்கிறார்கள். தன்னுடைய மாமியார் வீட்டில், தங்கள் ஆசை மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் பெண்ணிற்கு வரதட்சணையாக தந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு ரூ. 50 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு பிறகு மறுபடியும் ரூ.25 லட்சம் ரொக்கமும், இன்னொரு பெரிய ஸ்கார்பியோ எஸ்யூவி காரும் வரதட்சணையாக வேண்டும் என்று மருமகளை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார் மாமியார். அதைத்தொடர்ந்து மருமகளே பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்த விவகாரம் ஊர்பஞ்சாயத்து வரை போனது.. இறுதியில் பஞ்சாயத்தில் சுமூகமாக பேசி மீண்டும் மருமகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் மாமியார் விடுவதாக இல்லை.. மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.. இதன் உச்ச கட்டமாக மருமகளுக்கு எச்ஐவி தொற்று சிரின்ஜை பயன்படுத்தி, ஊசி செலுத்தி, நோய் பாதிப்பை ஏற்படுத்தினார். இதனால், மருமகளுக்கு உடல்நிலை வேகமாக மோசமடைய துவங்கியது.
நாளுக்கு நாள் உடம்பு மோசமாகவும், மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்தபோதுதான், அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் அப்பா, போலீசில் சென்று புகார் தந்துள்ளார்.
ஆனால், அவரது புகாரை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணும், அப்பாவும், சஹாரன்பூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்ஐஆர் )பதிவு செய்ய உத்தரப்பிரதேச போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இதனையடுத்து காங்கோ போலீஸ் நிலையத்தில், பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498ஏ (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது போன்ற சில முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போலீஸ் நிலையத்தில் அவ்வளவு எளிதாக நீதி கிடைப்பதில்லை. புகாரை கூட வாங்கி பதிவு செய்யாத காரணங்களால் தான் இது போல் பலர் நீதிமன்றங்களை நாடி சென்று உத்தரவு பெற வேண்டியது உள்ளது. இது மாமியார் கொடுமைய விட மிக மோசமான கொடுமையாக உள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலானது! யாருக்கு பாதிப்பு, சட்டம் என்ன சொல்கிறது?