மீண்டும் தொடங்குகிறது இலங்கை-நாகை கப்பல் வழி பயணம்..! கப்பல் நிறுவனம் அளித்த சலுகைகள் என்ன என்ன தெரியுமா..?
நாகையிலிருந்து இலங்கை காங்கேஷன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
நாகையிலிருந்து இலங்கை காங்கிரஸ் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் வானிலை மாற்றம் காரணமாக நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பரில் கப்பல் போக்குவரத்து இந்த மூன்று மாதங்களுக்குள் நிறுத்தப்பட்டது. தற்போது நாகையிலிருந்து இலங்கை காங்கிரஸ் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த சேவையின் போது பயண சீட்டு விலை குறைப்பு, கப்பலில் காலை மற்றும் மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க கப்பல் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து வானிலை சீரடைந்து தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததன் பேரில் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் இன்று முதல் தொடங்கியது. காலை 6 மணிக்கு துறைமுகம் சென்ற பயணிகள் துறைமுக அலுவலர்கள் சோதனைக்கு பிறகு கப்பலில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கப்பலில் ஏறிய பயணிகளை ரோஜாப்பூ கொடுத்து கப்பல் நிறுவனத்தினர் வரவேற்றனர். தற்போது நாகையிலிருந்து 83 பயணிகள் இலங்கை காங்கிரஸ் துறைக்கு சென்றுள்ள நிலையில் பிற்பகலில் இலங்கை காங்கிரஸ் துறையில் இருந்து 85 பயணிகள் நாகைக்கு வரவுள்ளனர். பயணிகளை கவரும் வகையில் கப்பல் நிறுவனத்தினர் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அக்கறை இல்லை... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!
அதில் ஒன்றாக இலங்கை செல்வதற்கு ஒரு வழி கட்டணமாக ரூ. 4,250ம் இருமலை கட்டணமாக ரூ.8,500 எனவும் பயணச்சீட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசமாகவும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி ஒரு பயணிக்கு 10 கிலோ வரை இலவசமாக பொருட்கள் எடுத்துச் செல்லவும் கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இந்தியா இடையே நள்ளிரவு ஏற்படவே இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள கப்பல் நிறுவன இயக்குனர், விரைவில் சுமார் 250 பேர் பயணிக்க கூடிய அதிவேக மற்றொரு கப்பல் சேவையும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதையில் கிடந்த நண்பர்கள்.. கடல் அலை இழுத்துச் சென்றவிட்டதாக போலீசாரை அலைகழித்த நபர்..