ஓஹோ... இதுக்குத்தான் அப்பாவு மேல தீர்மானமா?... அதிமுகவை அடித்து நொறுக்கிய மு.க.ஸ்டாலின் ...!
அதிமுகவிற்குள் நிகழ்ந்து வரும் உட்கட்சி பூசலை மூடி மறைக்கவே அப்பாவு மீது இப்படியொரு தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
அவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார். இதன் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து, தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து இறுதியாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், யாரும் யார் மீதும் விமர்சனம் வைக்கலாம், ஆனால் என்றாவது ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விமர்சியுங்கள் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அதனால் தான் அவர் படமாக இல்லை பாடமாக நிற்கிறார். அவரது நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் இப்பேரவையின் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை அப்பா பெற்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு என்னால் இது போன்ற ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டதை எண்ணி நான் அன்றைக்கு வருந்தினேன் என்று என் உரையிலே பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இத்தீர்மானம் இன்றைக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம் கடந்த பேரவைகளின் செயல்பாடுகள் அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்து கொண்ட முறைகளை பற்றியும் இங்கே உள்ள நம்முடைய பேரவை
முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும் ஏன் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு கூட நன்றாக தெரியும். நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவற்றோடு தற்போதைய பேரவைத் தலைவர் செயல்பாடுகள் அவைகளை ஒப்பீடு செய்து நம்முடைய பேரவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தை கருதுகிறேன்.
இதையும் படிங்க: சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாமக புறக்கணிப்பு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!
2006-2011 காலகட்டத்தில் நம்முடைய பேரவைத்தலைவர் அப்பாவும் இந்த அவையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அப்பொழுது நான் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். அப்போதிலிருந்து எனக்கு அவரை நன்றாக தெரியும். அப்பாவு ஜனநாயக கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், மற்றவர்கள் மனம் வருந்தாத அளவிலே தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கக்கூடிய பண்பு கொண்டவர். அவரது நடுநிலையோடு நிற்கக்கூடிய நேர்மை திறனும் அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகக்கூடிய பாங்கும் என்னை கவர்ந்த காரணத்தால்தான், அவரைப் பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நம்முடைய பேரவைத்தலைவர் அப்பாவு, ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பானது. இவை இரண்டுமே பேரவைக்கு தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். இவை இல்லாவிட்டால் அவை கண்ணியத்தோடு கட்டுப்பாட்டோடு நடத்த இயலாது. இந்த அவையில் என்னுடைய தலையீடோ அல்லது அமைச்சர்களின் தலையீடோ பேரவை நடவடிக்கை இல்லாத வகையில்தான் பேரவைத் தலைவர் அப்பாவுஅப்பா அவர்கள் நடந்து வருகிறார்கள். கடந்த காலங்களில் நடைபெற்றது போல் அல்லாமல் ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் ஒன்றே என நினைத்து செயலாக்கி வருகிறார்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினரிடம் பாசம் பற்றும் கொண்டு செயல்படுபவர் நம்முடைய பேரவைத் தலைவர்கள் என்பதை மனசாட்சியோடு சிந்திக்கக் கூடியவர்கள் ஒப்புக்கொள்வார்கள். பேரவைத் தலைவருக்கு அருகிலே வந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அன்போடு பேசியிருப்பதை இந்த பேரவை உறுப்பினர் பார்த்த காட்சிதான் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கண் ஜாடையாக கூட பேசி நான் பார்த்திருக்கிறேன். தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்த்துவதையும் உங்களில் பலரும் பார்த்திருக்கலாம் எங்களைப் பொறுத்தவரையில் விவாதங்களில் விருப்பு வெறுப்பின்றி நாகரீகமாக வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் 23/3/2017 அன்று அன்றைக்கு இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை விதிமீரர்கள் மரபுகளில் இருந்து என்னுடைய உரைகள் அன்றைக்கு நான் சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். அது மாதிரியா இன்றைக்கு நடக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். நான் அன்றைக்கு உள்ளபடி வேதனைப்பட்டேன் அந்த வேதனை வெளிப்பாடாகத்தான் அது மீண்டும் தொடரக்கூடாது என நான் முடிவெடுத்தேன். இந்த அவையில் அது மாதிரி நிகழ்வுகள், விதிமீறல், ஜனநாயகத்தை மரபு மீறல்கள் எதுவும் நிகழக்கூடாது என்பதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் காட்டிய உறுதி தான் அப்பாவி அவர்களும் பொறுப்பை ஒப்படைக்கச் செய்தது.
அப்பாவும் முழுமையாக அதனை உணர்ந்து பேரவைத் தலைவராக தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து செயலாற்றுகிறார். இந்த தீர்மானம் அப்பா அவர்கள் மீது சில அதிருப்தி உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கிறது இதை ஒட்டி அவர்கள் வைத்த அன்றைக்கு திமுக உறுப்பினர்களை பார்த்து அன்றைக்கு பேசப்பட்ட வார்த்தைகள் இன்றைக்கு அவையில் பேசப்படுமானால் உடனே பேரவைத் தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. அன்றைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் பேசினால் அவை குறிப்பில் இடம்பெறும், திமுக உறுப்பினர் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை இருந்தது, இன்றைக்கு பேரவைத் தலைவர் அப்படியா நடந்து கொள்கிறார்.
பேரவையில் கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவராக அப்பாவு செயல்பட்டு வருகிறார் என்பதை நான் குறிப்பிட்ட விரும்புகிறேன். பல நாட்களில் அதிமுக உறுப்பினர் பேச அனுமதித்துவிட்டு, திமுக உறுப்பினர்கள் பேச பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தும் இன்னொரு நாள் பேசலாம் என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். பேரவைத் தலைவர்களுடைய செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்ட முடியாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட மனதிற்குள் பாராட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா? அல்லது அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்த வேண்டும். நாம் நடத்த வேண்டாம் வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும் எனக்கூறினார். இப்படி ஒருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோம் என்ற எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும் என்றும், இதனை பேரவைத்தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்.... காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன?