×
 

“ஆளுநருக்கு எச்சரிக்கை... அண்ணாமலைக்கு நன்றி”... தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்! 

தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியுடன் முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல் சண்டை போடுகிறார் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியுடன் முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல் சண்டை போடுகிறார் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

வேலூர், காட்பாடி காந்தி நகரில் ஆதி லட்சுமி திருமண மண்டபம் அருகில் இன்று பொங்கலை முன்னிட்டு திமுக பொதுசெயலாளரும் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று கட்சி தொண்டர்களை சந்தித்தார்.

 இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், துணைதலைவர்கள் சங்கர் செல்வம் உள்ளிட்டோர் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து கூறினார்கள். அமைச்சரும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து கூறினார். 

இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக் வைத்த அமலாக்கத்துறை... 22-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...

ஆளுநருக்கு எச்சரிக்கை: 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், தமிழக ஆளுநர் நேற்று ஒசூரில் பேசும் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழகத்தில் ஒடுக்கபடுவதாக கருத்து தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஆளுநருக்குரிய மாண்பையும் மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல் ஆட்சியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை ஆளுநருக்கு லாபமுமில்லை. ஆகையால் ஆளுநர் அரசியல்வாதியாக பொறுப்பேற்றதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும். ஆளுநரை மாற்றுவது என்பது மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை, நாங்கள் கவர்னர் பதவியே வேண்டாம் என சொல்கிறோம். இவர் போய் இன்னொருவர் வர வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை என்றார். 

அண்ணாமலைக்கு நன்றி: 

 தமிழகத்தில் புதிய மணல்குவாரிகள் துவங்குவது குறித்து கேட்டதற்கு நாங்களே துவங்க வேண்டுமென்றாலும் முடியாது எல்லா ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது மணல் எடுக்க முடியாது என்றார். பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் துரைமுருகன் ஓய்வு பெற வேண்டுமென சொன்னது குறித்து கேட்ட போது அவரின் நல்லெண்ணத்திற்கு நன்றி பொதுவாக அவர் என்னை பற்றி எப்போதும் பேசமாட்டார். இப்பொழுது பேசியிருக்கிறார், நான் அதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவு... இரவு முழுவதும் தொடர்ந்த ED ரெய்டு... அதிர்ச்சியில் வேலூர் திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share