அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்... திமுகவை அதிர வைத்த அண்ணாமலை.!
தமிழக பாஜக பதவியிலிருந்து செல்லும் முன் அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், "மத்திய பட்ஜெட்டை எதிர்த்து திருவள்ளூரில் முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்தினார். தன் பட்ஜெட்டைப் பற்றி எதுவும் பேசாமல் மத்திய பட்ஜெட்டை குறை சொல்லி முதல்வர் பேசியதிலிருந்தே இது சிறப்பான பட்ஜெட் என்பதை உணர்ந்துகொண்டேன்.ம த்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைய போகின்றனர்.
தாய்மொழியில் தமிழக மாணவர்கள் பின்தங்கி இருப்பதாக ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சொல்லி அரசியல் செய்யும் திமுக இதற்காக வெட்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்ல வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். தமிழக அரசு அதற்கான முயற்சியை செய்தால், நிதியை மத்திய அரசிடம் பாஜக பெற்று தரும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகிறார். தமிழகத்தில் 2026-ல் 35 ஊழல் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள்.
தமிழகத்தில் 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு சென்று, முதல்வர்களைச் சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களை பார்த்துவிட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் தற்போது தமிழகத்தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. டெல்லியிலும் ரூ.2,500 அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லாவற்றையும்விட, மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையைவிட அதிகமாக தமிழகத்தில் வழங்கப்படும்.
திமுகவில் துண்டு போட்டு ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் கட்சித் தலைவராக முடியும். பாஜகவில் அப்படி முடியாது. நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தப் பதவியிலிருந்து செல்லும் முன்பு அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்" என்று அண்ணாமலை பேசினார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!
இதையும் படிங்க: தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது... திமுக கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!