''தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்..'' நாடாளுமன்றத்தில் சவால் விட்டு வெறுப்பை கக்கினார் வைகோ. ''இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்... தடுத்துப் பார்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விட்டிருந்தார். நேற்று நடந்த இந்த காரசார விவாதத்தை அடுத்து மறுநாளான இன்றே சென்னை வந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

நேற்று நாடாளுமன்றத்தில் வஃக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்.பி., சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்து தமிழ்நாட்டில் கால் வைத்துப்பார் என தனது வெறுப்பைக் கக்கினார்.அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க: இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்..! தடுத்துப் பார் வைகோவுக்கு நிர்மலா சவால்

அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், ''கொஞ்சம் பொறுங்கப்பா... ஒரு நிமிஷம் இருங்கப்பா.. என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார். அப்போது, ''வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர். ஆனால், இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. ''நீ தமிழ்நாட்டுல கால் வை பார்க்கிறேன்... நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன்'' என்று அவர் பேசுகிறார். ''இது ரொம்ப தப்பு...இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கால் வைப்போம். அப்படி சொல்லக்கூடாது. நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது'' என எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் கால் வைத்துப் பார் என்று வைகோ மிரட்டிய நிலையில் அடுத்த நாளே தமிழகத்தில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து நடக்கும் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்க உள்ளார்.

சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நான்காயிரம் பேர் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன். இதை அவர் தனது எக்ஸ்தள பதிவிலும் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். தமிழக திமுக எம்.பி.,க்கள் தொடர்ந்து கெத்துக் காட்டுவது போல் பேசிவிட்டு தொடர்ந்து, அசிங்கப்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை வந் நிர்மலா சீதாராமனை தமிழைசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!