இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை உருவக்கேலி செய்த பெண்ணுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடி வருகிறது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்திய அணியின் கேட்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா பெரிதாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மாவை உருவக்கேலி செய்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு விளையாட்டு வீரருக்கும் இருப்பதை காட்டிலும் ரோஹித் சர்மா அதிக எடையுடன் இருக்கிறார். அவர் இன்னும் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். இந்திய அணியின் மிகவும் தகுதியில்லாத கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா குண்டா இருக்காரு... அவரு கேப்டனாக இருப்பதே அசிங்கம் என்ற பிரபலம்!!
இதை பார்த்த ரோஹித் சர்மாவின் பேன்பேஸ் ஷாமா முகமதுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் பாஜகவும்மு காங்கிரஸ் கட்சியை விமர்சித்து ஷாமா முகமதுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரோஹித்தின் உருவக்கேலிக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ தேவஜித் சாய்க்கியா , மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் இந்திய அணியின் கேப்டனை பற்றி பேசப்படும் கருத்துகள் தவறானது. ரோஹித் ஐசிசி தொடரில் விளையாடி வருகிறார். அடுத்ததாக அரையிறுதியில் இந்திய அணி விளையாட உள்ளது. இது போன்ற நேரத்தில் சர்ச்சையாக பேசுவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார். முன்னதாக தன்னுடைய கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டித்ததால் ரோஹித் பற்றிய பதிவை பதிவை ஷாமா முகமது நீக்கியுள்ளார்.
இதையும் படிங்க: மைதானத்தில் குட்டி ரோஹித்தை கொஞ்சிய அனுஷ்கா சர்மா... வைரலாகும் புகைப்படம்!!