முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... நாக்பூரில் இந்திய அணியிடம் இங்கிலாந்து சரண்டர்.!
நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற விளையாட இந்தியா வந்துள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்த்ச்து.
அந்த அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் நிதானமாக விளையாடி 43 ரன் எடுத்தார். பென் டக்கெட் 32 ரன் சேர்த்தார். கேப்டன் ஜாஸ் பட்லர்(52) பெத்தேல் (51) அரை சதம் அடித்தனர். மற்றவர்கள் பெரிதாகச் சோபிக்கவில்லை. இந்திய தரப்பில் ஹர்சித் ரானாவும் ரவீந்திர ஜடேஜாவும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 249 ரன் என்கிற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தடுமாறினர். ரோஹித் 2 ரன்கள் எடுத்த நிலையில் மகமூத் பந்தில் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஷ்ரேயஸ் சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடி (59) அரைசதம் அடித்தார். அக்ஷர் பட்டேல் (52) அரைசதம் அடித்து ரஷித் பந்தில் போல்டானார். நிலைத்து ஆடிய கில் 87 ரன் சேர்த்து அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 2 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா 9 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களும் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 38.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: வருண் சக்ரவர்த்திக்கு அதிர்ஷ்டம்… பிசிசிஐ கொடுத்த முக்கிய வாய்ப்பு..!