IPL 2025: 65 நாட்கள் 74 போட்டிகள்.. ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெகா விருந்து.!!
பதினெட்டாவது ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. பிளே ஆஃப் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.
2008 முதல் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு பதினெட்டாவது சீசன் ஆகும். இந்த சீசன் மார்ச் 22 தொடங்கி மே 25 வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 திருவிழாவின் தொடக்க விழாவும் முதல் போட்டியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொங்க உள்ளது.
இத்தொடரில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2008இல் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 2016இல் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2022இல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் 17 சீசன்களாக பட்டமே வெல்லாத ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி 2 முறை பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பட்டம் வெல்வதற்காக மல்லுக்கட்ட உள்ளன.
இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா… அனிரூத் இசையுடன் தொடங்கும் ஐபிஎல்!!
தொடக்க ஆட்டத்தில் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுக்குமே புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் கொல்கத்தா அணி அஜிங்க்ய ரஹானே தலைமையில் விளையாட உள்ளது. பெங்களூரு அணி இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகாத ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்குகிறது. மூத்த வீரர் விராட் கோலி வழிகாட்டுதலுடன் ஆர்சிபி விளையாட உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் டீமோடு ரிக்கி பாண்டிங் செய்த செயல்... கடுப்பான பாக். ரசிகர்கள்!!