சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளது அணி நிர்வாகம். நடப்பு ஐபிஎல் சீசனில் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் தோனியே கேப்டனாகஇருந்து வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜுக்கு இடது முழங்கையில் பந்து தாக்கியதில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, காயம் குணமாக காலம் எடுக்கும் என்பதால், ருதுராஜ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விலகியதையடுத்து, கேப்டன் பொறுப்பை தோனி ஓர் ஆண்டுக்குப்பின் மீண்டும் ஏற்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாகியுள்ள நிலையில் நாளை(ஏப்ரல்11) சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கடந்த சீசனில் தோனி ஒப்படைத்தார். கேப்டனாக ருதுராஜ் செயல்பட்டாலும், பின்னால் இருந்து தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் தோனி செய்து வந்தார்.
இதையும் படிங்க: மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 2023ம் ஆண்டுவரை தொடர்ந்தார். இந்த 15 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தோனி பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தலைமுறை மாற்றத்துக்கு தயாராக புதிய கேப்டனை நியமித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் நியமிக்காமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாலும் கேப்டனாகவும் செயல்படு சிரமம் என்று கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் தோனிக்கு அடுத்தார்போல் கேப்டன் பதவிக்கு யாரை வளர்க்கலாம் என்று யோசித்து கெய்க்வாட்டை உருவாக்கினர்.
ஆனால், கடந்த சீசனில் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லமுடியாமல் கடைசி ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது. சிஎஸ்கே அணி தோனி தலைமையில் செயல்பட்டபோது, நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில்யே “கன்சிஸ்டென்ட் டீம்” அதாவது நிலைத்தன்மையான அணியாக சிஎஸ்கே வலம் வந்தது.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடியுள்ளது. ிதில் 142 போட்டிகளில் தோனி வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். அதிகமுறை கேப்டனாக இருந்ததும், ஓர் அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் தோனி திகழ்ந்தார். 2023ம் ஆண்டு கடைசியாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு, 5வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து தோனி இறங்கி, ருதுராஜ் கெய்வாட்டிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்நிலையில் 2024ம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்டார், அதில் ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட செல்லவில்லை. 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு படுமோசாக அமைந்தது. இதுவரை 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோற்று படுமோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் கெய்க்வாட் இடது முழங்கையில் பந்து தாக்கி, லேசான எலும்பு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் எம்எஸ் தோனி ஏற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் “ ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். ருதுராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அவரது பவுலிங் சுத்தமா செட் ஆகாது... சிஎஸ்கே பவுலர் பற்றி முன்னாள் கேப்டன் கருத்து!!