தமிழில் வெளிவந்த மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி இவரை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. இவர் ஈரம், அரவான், போன்ற படங்களை நடித்து இருந்தாலும், இவரது சிறந்த படம் என்றால் அது மரகத நாணயம் தான். இதனை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஆதி நடித்துள்ள திரைப்படம் தான் சப்தம்.

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் தங்களது முதல் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு படம் அருமையாக உள்ளது என கூறி வந்தனர்.
இதையும் படிங்க: ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..!

இந்த நிலையில் சப்தம் படத்தின் இயக்குநரான அறிவழகன், அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அதில்,
மதிப்பிற்குரிய அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வணக்கம்,
வெள்ளிக்கிழமை (பிப்.28) 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதி நடித்து, எனது இயக்கத்தில் 'சப்தம்' என்னும் திரைப்படம் வெளியாகி இருப்பதை அனைவரும் அறிவோம்.சப்தம் திரைப்படத்தின் கதை சப்தத்தை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவி திரில்லர் படம் என்பதால் இசை, ஒலியமைப்பு அனைத்தும் ஒரே சமயத்தில் பார்ப்பவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்காது. அதன் துல்லியத்தை உணரும் வகையிலும், திகிலை உணர்த்தும் வகையிலும் டால்பி அட்மோஸ், 7.1,மற்றும் 5.1 முறையில் தனித்தனியே திரையரங்குகளுக்கு ஏற்றார் போல் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் திரைப்படம் அனுபவம் என்பது பெரிய திரையில், நவீன ஒளி, ஒலி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போதுதான் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கின்றது. எனவே, திரையிடுவதற்கு முன்பே ஒலி பெருக்கி, ஒலியமைப்பு கருவிகளை அளவு திருத்தி (Calibrate) செய்து இந்தப் படத்திற்கென ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு, அமைப்புக்கு ஏற்றவாறு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். சப்தம் திரைப்படத்தின் அனுபவத்தினை மக்கள் முழுமையாய் உணரும் பொருட்டு உங்கள் ஒத்துழைப்பினை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
அறிவழகன் திரைப்பட இயக்குநர்.

என அவர் திரையங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பி இருக்கும் லெட்டர் பேடின் வாக்கியங்கள் தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் பொழுது "சப்தம்" படம் பேய் கதையை மையமாக கொண்டு இருந்தாலும் அதன் சிறப்பம்சம் சவுண்டில் தான் உள்ளது என்பதை அறிந்த ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் காண படையெடுத்துள்ளனர்.

இந்த பதிவுகளை பார்த்த செட்டிசன்கள், படத்தின் பார்வையாளர்களை கவர இப்படி ஒரு முயற்சியா என கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..!