நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் எனவும் மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக வாழ்ந்த இவர்கள் இருவர் மீதும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிங்க: நாக சைத்தன்யாவின் புது மனைவி வெளியிட்ட ரகசிய போட்டோ.. அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த புகைப்படம்..!

இதனை அடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் என்ற செய்தி வெளியாகி அனைவரும் புறணி பேச, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி படஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.

இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா தன்னுடைய தனிமையை போக்க, ஈஷா யோகா மையம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீண்ட நாட்களாக மௌனம் காத்த சமந்தா தற்பொழுது தனியார் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க வேண்டும் என்றும் அடுத்து ஒரு படம் உள்ளது அதன்பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வேறொரு படம் உள்ளது. ஆதலால் இனி தனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது. எனவே சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தா கம்பேக் கொடுக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!