இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சௌந்தரபாண்டி வரவைத்து இருந்த பெண் வீட்டார் சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிவபாலன் எனக்கு ஓகே தான் பா.. நான் வீட்டோட மாப்பிள்ளையாக போயிடுறேன்.. நீங்க மட்டும் தனியா சந்தோசமா இருங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி இனிமே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என சத்தம் போடுகிறார்.
இதை தொடர்ந்து திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஒரு குடும்பம் கோவிலில் பரிகாரம் செய்வதற்காக திருச்செந்தூர் வருகின்றனர்.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!
அப்போது கணவனும் மனைவியும் கோவில் குளத்தில் தலை மூழ்கி வருவதற்காக செல்கின்றனர், தங்களது குழந்தையை மட்டும் காரில் உட்கார வைத்து விட்டு ட்ரைவரை பார்த்து கொள்ள செல்கின்றனர். திடீரென குழந்தைக்கு பிக்ஸ் வர ட்ரைவர் பதறி போய் குளத்தருகே செல்கிறார்.
அங்கு யாரும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி குழந்தையை பரணியின் கிளினிக்கிற்கு அழைத்து செல்கிறார். குழந்தையை பரிசோதனை செய்த பரணி உடனே மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மதுரைக்கு கிளம்புகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அமெரிக்காவில் இருந்து திருச்செந்தூர் வரும் பிரபலங்களாக தெய்வம் தந்த பூவே ஸ்ரீநிதி மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜமீலா என்ற சீரியலில் நாயகனாக நடித்த அஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரமாக நினைத்தேன் வந்தாய் சீரியல் அஞ்சலி பாப்பா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!