அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் வைஜெயந்தி யாரு யாரு கிட்ட மன்னிப்பு கேட்கணும்? என சத்தம் போடுகிறாள். வீராவும் ஊர் மக்களும் உங்க பையன் பண்ணது தப்பு, அவங்க கண்டிப்பா மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என பேசுகின்றனர்.

கடையில் இருந்து அங்கு வந்த முத்துப்பாண்டி வைஜெயந்திக்கு வணக்கம் சொல்லி வீரா ரொம்ப நல்ல பொண்ணு அவளும் SI ஆக போகிறாள் என்று சொல்ல எங்க வேலைக்கு சேர்ந்தாலும் எனக்கு கீழே தானே வேலை செய்யணும் என்று சொல்கிறார்.

இதையும் படிங்க: Anna Serial: நியூ என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்.! வீராவுக்கு விழுந்த அறை! அண்ணா எபிசோட் அப்டேட்!
வீராவும் மக்களும் நீங்க யாரா வேணா இருங்க.. தப்பு செய்தா மன்னிப்பு கேட்கணும்ல என்று பதில் கொடுக்க முத்துப்பாண்டி யாராவது வீடியோ எடுத்து போட்டுட்டா அது உங்களுக்கு தான் சிக்கல், மன்னிப்பு கேட்க சொல்லுங்க மேடம் என்று சொல்ல வைஜெயந்தி தனது மகனை மன்னிப்பு கேட்க சொல்கிறாள்.

மன்னிப்பு கேட்ட கௌதம் என்னையே மன்னிப்பு கேட்க வச்சிட்டல உன்னை சும்மாவே விட மாட்டேன் என்று எச்சரித்து விட்டு கிளம்பி செல்கிறான். சண்முகம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்ததும் முத்துப்பாண்டி வைஜயந்தி மோசமான போலீஸ் ஆபிசர் என்பதை சொல்கிறான்.

அடுத்து வீட்டிற்கு வந்த கௌதம் வீரா மீது கோபமாக இருக்க வைஜெயந்தி அவ மேல ஒரு FIR போட்டு போலீஸ் ஆக முடியாத மாதிரி பண்ணிடுறேன் என்று சொல்ல, கௌதம் அது மட்டும் போதுமா என ஆவேசப்படுகிறான். வைஜெயந்தி யாருக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லி உள்ளே செல்கிறாள். 
கௌதமின் பாட்டி உங்க அம்மா கிட்ட நீ எதுக்கு அனுமதி கேட்கிற? அவள என்ன பண்ணணுமோ அதை பண்ணு நான் பார்த்துக்கறேன் என்று ஏற்றி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: ரத்னா கழட்டி வீசிய தாலியை... வீரா கழுத்தில் கட்ட முடிவு செய்த வெங்கடேஷ்! பரபரப்பான தருணத்துடன் 'அண்ணா' சீரியல் அப்டேட்!