தமிழில் இயக்குனர் சேரன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படமான "ஆட்டோகிராப்" திரைபடத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த படத்தை மீண்டும் காண ஆசைப்பட்டவர்களுக்கு ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் மிகவும் பிரமாண்டமாக ஆட்டோகிராப் திரைப்படம் ரீரிலீசாக இருக்கிறது என படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இப்படி இருக்க இன்று, இறந்தவர்களை மீண்டும் உயிருள்ள காட்சிகளாக கொண்டு வருவது, இறந்தவர்களின் குரலை வைத்து பாட வைப்பது, பேச வைப்பது, பழைய திரைபடங்களை இன்றைய கால டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மீண்டும் வெளியிட வைப்பது என கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் அடியெடுத்து வைத்து இருக்கிறது ஏஐ என்று சொல்லக்கூடிய ஆர்டிபிஷியல் இன்டலிஜெண்ட்.

அதன் படி, இயக்குனர் சேரன், ஆட்டோகிராப் படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரீரிலீஸ் தான் செய்வார். நான் படமே எடுப்பேன் என தற்போது ஹிந்தியில் "நைசா" என்ற படம் தயாராராக்கி வருகிறார் இயக்குனர் விவேக் அஞ்சலியா.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் படத்தின் காட்சிகள் தான் என் வாழ்க்கை.. மணிகண்டன் கண்ணீர் மல்க ஓபன் டாக்..!

இவரது இயக்கத்தில் காதல் கதையம்சத்தில் தயாராகி வருகிறது இப்படம். முழுக்க....முழுக்க... ஏஐயில் உருவாக்கிய இப்படத்தில் நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில், விமானம், மலை, அருவி, நகரம், கட்டிடங்ள் என அனைத்துக்கும் பலகோடி செலவு செய்யாமல் ஏஐயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது திரைத்துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.

இந்த சூழலில், சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளவில் தற்பொழுது வரை ரூ.35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை கன கச்சிதமாக எடுத்து காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

மணிகண்டனின் நடிப்பு இப்படத்தில் பயங்கரமாக இருந்தது .அதுமட்டுமல்லாமல் தனது அக்கா கணவரை வசைபாடுவதும், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை திருமணம் செய்வதால் உறவுகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் என்ன பேசுவார்கள் என்பதையும், வீட்டில் பையன் சம்பாரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் சிறப்பாக காண்பித்து இருப்பார் இயக்குநர். அதுமட்டுமல்லாமல் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியான இப்படத்தை 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என போஸ்டர் போட்டு சமீபத்தில் மகிழ்ந்து இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தநிலையில், இப்படத்தில் மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி தற்பொழுது அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார் "குடும்பஸ்தன்" படத்தின் கதாநாயகியான சான்வி மேக்னா. இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..!