அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை, எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக நிற்பவர் மாதம்பட்டி ரங்கராஜன் தான். ஏனெனில் அவருக்கு அங்கு தான் வேலைகள் அதிகமாக இருக்கும். இன்று எப்படி பெரிய புள்ளிகள் அவர்களது வீட்டில் rolls-royce கார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ.. அதேபோல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் என்றால் 'மாதம்பட்டி ரங்கராஜன்' சமையல இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய 'பிராண்ட்'என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு இன்று வளர்ந்து நிற்கிறார்.

இன்று சமையலில் வெளுத்து வாங்கும் மாதம்பட்டி ரங்கராஜ், குக்கூ படத்தின் இயக்குனரான ராஜமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த "மெஹந்தி சர்க்கஸ்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். படம் பெரிதளவில் ஓடவில்லை என்றாலும் ரங்கராஜன் நடிப்பு பலரால் பேசப்பட்டது. அதன் பின் மீண்டும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் ரங்கராஜன் தனது குடும்பத்தின் தொழிலான சமைக்கும் தொழிலை கையில் எடுத்து, இன்று சமையலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதுவரை ரங்கராஜன் என்று அழைத்தவர்கள் காலப்போக்கில் மாதம்பட்டி ரங்கராஜன் என அழைக்க தொடங்கினர். எப்படி செட்டிநாடு சமையல் என்கின்றோமோ அதே போல் தற்பொழுது மாதம்பட்டி சமையல் என மாற்றி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இப்படி இருக்க, மாதப்பட்டி ரங்கராஜன் படங்களில் ஹீரோவாக வலம் வரவில்லை என்றாலும் தான் கையில் எடுத்த சமையல் துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் " குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இவர், டைமிங் காமெடி செய்வதுடன் நடுவராகவும் தனது தனித்துவத்தை காமித்து வருகிறார். இன்று சின்னத்திரை வட்டார நிகழ்ச்சிகளில் சிறந்த நடுவர் என்றால் அது மாதம்பட்டி ரங்கராஜன் தான் என்ற பெயரும் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, தனது வெற்றி பயணத்தின் நடுவில் 'ஸ்ருதி' என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதம் பட்டி ரங்கராஜனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான 'ஜாய் கிறிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜனும்' காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் முதல் வெளி உலக வட்டாரம் வரை அனைவரும் பேசத் தொடங்கியுள்ளனர். இவர்களின் பேச்சுக்கு ஏற்றார் போல் ஜாய் கிறிஸில்டாவும் தனது இன்ஸ்ட்டா பகுதியில் மாதம்பட்டி ரங்கராஜன் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.இது "எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது" போல் ஏற்கனவே பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு மேலும் வலுசேர்த்து உள்ளது.

இந்த சூழலில், இதுவரைக்கும் இந்த கிசுகிசுகளுக்கு எந்தவித பதிலும் கொடுக்காத ரங்கராஜன் மனைவி ஸ்ருதி, தற்பொழுது தனது இன்ஸ்டாகிராமில் சில போஸ்ட்களை போட்டு இருக்கிறார். ரங்கராஜுடன் தான் எடுத்த புகைப்படத்தையும், குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து அதில் "கோடி அருவி கொட்டுதே உன் மேல" என்ற பாடலை வைத்து, கீழே 'ஆம் நான் தான் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி என்று கமெண்டும் செய்து, மாதம்பட்டி ரங்கராஜை டாக் செய்து இருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மாதம்பட்டி ரங்கராஜூம் அவரது மனைவி ஸ்ருதியும் தற்போது வரை நல்ல பந்தத்தில் தான் இருக்கிறார்கள் என்றும் இனிமேலாவது புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாக சைத்தன்யாவின் புது மனைவி வெளியிட்ட ரகசிய போட்டோ.. அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த புகைப்படம்..!