தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர் என்றால் அது சந்தானம் மட்டுமே. தற்பொழுது ஹீரோக்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்து காமெடி ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது.
இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை"படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் பெரிதும் அப்படம் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு தனி இடத்தை உருவாக்கினார். அதற்கு பின் பல படங்களில் காமெடியனாக நடித்து இன்று சம்பளத்திலும் ரசிகர்களிலும் தற்பொழுது லட்சங்களை தாண்டி கோடிகளில் இருக்கிறார்.

இவரை போல், நடிகர் ஆர்யாவும், விஷ்ணுவர்த்தன் இயக்கிய "அறிந்தும் அறியாமலும்" என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிக்கு மகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!

இப்படி இவர்கள் இருவரின் படத்தை எடுத்து கணக்கிட்டால், அதிலும் தோராயமாக 10 படங்களுக்கு மேல் இருவரும் ஒன்றாக நடித்து இருப்பர். அப்படி இவர்கள் இருவரும் நடித்து பயங்கர ஹிட்டான திரைப்படம் என்றால் அது கடந்த 2010ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, சந்தானம், நயன்தாரா, விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு ஆகியோரின் நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்"திரைப்படம்.

இப்படத்தில் ஆர்யா -சந்தானம் சேர்ந்து "நண்பேண்டா...!" என்று சொல்வதும், 'செஞ்சோற்று கடன் தீர்க்க' என்ற பாடலுக்கு சந்தானம் கொடுக்கும் ரியாக்ஷனும், 'தல தளபதி சலூனை' வைத்து அடி வாங்குவதும், பின் டுட்டோரியல் சென்டர் வைத்து வாழ்க்கையில் முன்னேறுவதும் என படம் முழுவதும் காமெடியாக இருக்கும்.

இந்த சூழலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் "பாஸ் என்கின்ற பாஸ்கரன்" திரைப்படம் சமீபத்தில் 50க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட "பாஸ் என்கிற பாஸ்கரன்" படக்குழுவினரிடம், இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது எடுப்பீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் "ஆர்யாவிடம் இதை பற்றி பேசிவருவதாகவும், அதற்கான முயற்சி போய்க்கொண்டு இருக்கிறது. கூடியவிரைவில் படத்தை குறித்த அப்டேட் உங்களுக்கு வரும்" என கூறினார். தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக பேசிய இயக்குநர் ராஜேஷ் "அருமையான ஸ்கிரிப்ட் என் கையில்இருக்கிறது. ஆனால் அதனை சரியாக உருவாக்க மீண்டும் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் அனைவரும் சேர்ந்து நடித்தால் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும்" என கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்பொழுது கண்டிப்பாக "பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்திற்கான" ட்ரீட் இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாருன்னு என்னை கூப்பிட வேண்டாம்..! நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை கோரிக்கை..!