விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்3 ம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர்.

செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி ஒருவர் சேற்றை வாரி வீசினார். அவர்மீது அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனிப்பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இதையும் படிங்க: கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழப்பா..? எங்களுக்கு சம்பந்தமே இல்லீங்க.. மத்திய அமைச்சர் ‘பல்டி’!
இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதேசமயம், அரசு அதிகாரிகள் - மக்கள் பிரதிநிதிகளிடம் மரியாதையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஏன் கொந்தளிப்புடன் நடந்து கொள்கின்றனர் என்பது குறித்து அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை..!