ஜனவரி 15 ஆம் தேதி இரவு சைஃப் அலி கான் தாக்கப்பட்டார். அதன் பிறகு அவர் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சைஃப் 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அப்போது சைஃப் அலிகானும், அவரது குடும்பத்தினரும் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை சந்தித்தனர். அவர் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்.சைஃப் அலி கான் அவரது தோளில் கை வைத்து நன்றி தெரிவித்து, முழு மரியாதை செலுத்தினார். அவரது தாயார் ஷர்மிளா தாகூரும் கூப்பிய கைகளுடன் நன்றி கூறினார். உதவி செய்ததற்காக, சைஃப் அலி கான் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அளித்துள்ளார்.

சைஃப் அலி கான் கத்தி குத்து காயங்களுடன் ஒரு ஆட்டோவில்தான் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அந்த ஓட்டுநருக்கு நடிகர் சைஃப் அலிகான் தான் அவர் என்பது தெரியாது. இதற்காக அவர் சைஃப் அலிகானிடம் இருந்து அப்போது எந்தப் பணத்தையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங், விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததற்காக சைஃப் அலிகானின் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்த விதத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆட்டோ டிரைவர் சைப் அலிகான் வீட்டில் இருந்தபோது ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அதைத்தவிர வேறு எதையும் அவர் கேட்கவில்லை ஆனால் அவர் அங்கு இருந்தபோது, அவரது ஆசை அவரது நாவில் வந்தது. அவர் சைஃப் அலிகானின் குடும்பத்தினரிடமிருந்து எதையும் கேட்கவில்லை. ஆனால் ஆட்டோ டிரைவருக்கு வேறொரு பரிசு வேண்டும் என்று ஆசை இருந்தது.
இதையும் படிங்க: மரணத்தின் வாசல் வரை சென்ற சைஃப் அலிகான்; இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா கூறுகையில், ''சைஃப் அலிகானை சந்தித்தேன்.இந்த உதவிக்காக அவர் எனக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கியுள்ளார். தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் அதைக் கேட்கவில்லை. ஆனால் அவர் எனக்கு ஆட்டோ ரிக்ஷாவை கொடுக்க விரும்பினால், நான் அதை எடுத்துக்கொள்வேன். ஆனால் நான் அதைப்பற்றி சைஃப் அலிகானிடம் எதுவும் கேட்கவில்லை. நான் செய்ததற்குப் பதிலாக எதையும் பெற வேண்டும் என்ற பேராசையும் எனக்கு இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் மும்பையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் ஓட்டும் ரிக்ஷாவும் அவருடையது அல்ல. இதற்கும் பஜன் சிங் வாடகை செலுத்துகிறார். இதனால்தான் சைஃப் அலி கானிடம் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை பரிசளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பஜன் சிங்கும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை பரிசாக விரும்புகிறார்.
சைஃப் அலி கானுக்கு உதவியதற்காக, சமூக சேவகர் பைசான் அன்சாரி முதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு 11 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்தார். இதன் பிறகு சைஃப் அலிகான் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சமீபத்தில் பாடகி மிகா சிங் ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷாருக்-சல்மான்கான் வீடுகளே முதல் டார்கெட்... சைஃப் அலிகான் வீட்டை தேர்ந்தெடுத்தது ஏன்..? குற்றவாளியின் பகீர் ப்ளான்..!