நாமக்கலில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை கூடச் சொல்லவில்லை எனத் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை பட்ஜெட்டாக நான் பார்க்கவில்லை. வரவிருக்கும் தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கையாகத்தான் பார்க்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய முடியவில்லை என்றால், அதற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என சொல்வதற்காக முன்கூட்டியே தயார் செய்துள்ள அறிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன்.

பெரியார் எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அப்படியானால், 1967ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என பெரியார் ஏன் சொன்னார்? ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்தால் தமிழகம் நாசமாக போய்விடும் என்று பெரியார் சொன்னார். அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே ராஜாஜிதான். ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வர பெரியார் காரணம் இல்லை. இந்தப் பூமி தேசியத்தையும், தெய்வீதகத்தையும் அடிப்படையாகக் கொண்ட பூமி ஆகும். ஆனால், தேசியத்தையும், தெய்வீகத்தையும் திராவிடம் என்ற போர்வை போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க: ஈசிஆர் கார் துரத்தல் வழக்கு.. வாக்குமூலத்தை வெளியிட்டது ஏன்.? அப்போ அண்ணா பல்கலை. தனசேகரன் வாக்குமூலம்.? நாராயணன் திருப்பதி கிடுக்கிப்பிடி.!

எனவே தமிழக முதல்வர் எடுக்கும் ஆயுதம் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பலிக்காது. திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் வரும் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும். இந்த திமுக அரசு தவறான அரசாங்கம் ஆகும். இதை வழிநடத்தும் தலைவர்கள் தவறான தலைவர்கள். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவுக்கு எதிராக உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என்று கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே.. விளம்பர மோக அரசு திமுக அரசுதான்.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்.!