நடிகை பாவனி ரெட்டி என்பதை விட பிக்பாஸ் பாவனி என்றால் தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்த இவர், திடீரென சீரியலுக்கு பிரேக் போட்டுவிட்டு பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டார். அப்பொழுது வரை பாவனியை பற்றி தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் அவர், நான் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன், ஆனால் திடீரென ஒரு நாள் என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள் என கண்ணீர் மல்க பேச, அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தவர் அமீர். அவர் வந்த உடனே பாவனியை பாதுகாக்க ஆரம்பித்து பல பேச்சுக்களையும் வாங்கினார், ஆனாலும் தான் பாவனியை காதலிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: டிக்கெட்டு பழசு.. ட்ரெண்டிங்கில் புதுசு..! 50 வருடத்திற்கு முன்பு ஹிட் கொடுத்த படம்..!

ஆனால், பாவனியோ "நான் உன்னை விட பெரியவள் என கூறி காதலை மறுத்தார். ஆனால் எப்படியோ அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காதலர் தினத்தன்று நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு coming soon என பதிவிட்டு இருந்தார்.

இதனால் குழம்பி இருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்கள் அமீர் மற்றும் பவானி. அதில், இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை, நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிடம் போல தான் இருக்கும் என கூறி ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு, எப்படியோ இருவரும் தங்கள் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலுமகேந்திராவை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..! அவரும் சைலன்ட் அவர் படமும் சைலன்ட் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!