கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் உயர்வுடனே வர்த்தகமாகி வந்த தங்கம் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வாரத்தின் கடைசி நாளாக கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதி நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,045 ரூபாய்க்கும், சவரன் 64,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (24/02/2024):
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 055 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: தலையில் இடியை இறக்கிய தங்கம்... வாரக்கடைசி நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு...!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 11 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 787 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 296 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை:

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுன் இன்றி நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கூட ஓரிரு நாட்களில் விலை குறையும் என காத்திருந்தால் தொடர்ந்து விலையேறி ஷாக் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: தங்கம் வாங்க தயாரா? ... உடனே நகை கடைக்கு ஓடுங்க...!