குஜராத் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் 76 வயதான ராம்பாய் பொரிச்சா. இவரது மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
அதிலிருந்து, தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் ராம்பாய் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ராம்பாயின் மகன் பிரதாப், மருமகள் ஜெயா, பேரன் ஜெய்தீப் ஆகியோர், அவரின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

குடும்ப கௌரவம், மானம், மரியாதை என கூறி, தந்தையின் எண்ணத்திற்கு மகன் பிரதாப் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸில் உள்ள பாஜக ஏஜெண்டுகளை நீக்க முடியுமா..? தன் கட்சிக்கு தானே கொல்லி வைக்கும் ராகுல்..!
இதனால் அடிக்கடி கோபப்படும் ராம்பாய், எனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவேன் என கூறி மிரட்டி வந்தார்.

வெறும் மிரட்டல் தான் என அதை பொருட்படுத்தாமல் அனைவரும் இருந்துள்ளனர். தன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தனியாக வசித்த பெரியவர், சமீபத்தில், மகன் பிரதாபை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் மற்றும் கணவரின் அலறல் சத்தம் கேட்டு, ராம்பாய் தங்கியிருந்த அறை கதவை பலமாக தட்டிய மருமகளையும் சுட முயன்று அவரை விரட்டிச் சென்ற போது அச்சமடைந்து, பக்கத்து அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டுள்ளார் மருமகள்.

தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்று பிரதாபின் சடலம் அருகே துப்பாக்கியுடன் ஆவேசமாக நின்றிருந்த தந்தையை கைது செய்தனர்.

அப்போது இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மகன் பிரதாபை சுட்டுக் கொன்றுவிட்டேன் என்றும்,. பல விதங்களில் தன்னை தொந்தரவு செய்து வந்தாதாகவும் வாக்குமூலம் அளித்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நான்தான் உலகின் மிகப் பெரிய பணக்காரன்..! மார்தட்டும் பிரதமர் மோடி..!