ஜாதி அரசியலின் பெயரால் சிலர் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்குதல் தொடுத்தார்.
"கிராமப்புற இந்தியா திருவிழா 2025-"ஐ பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றுதொடங்கி வைத்தார்.
கிராமப்புற இந்தியாவின் தொழில் முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா இன்று (ஜனவரி 4) முதல் 9-ந் தேதி வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சுட்டுப்பொசுக்கு... பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்தியாவின் ரா... நடுங்கும் தீவிரவாதிகள்..!
இத்திருவிழாவை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜாதி அரசியலின் விஷத்தை பரப்பி சிலர் அமைதியை சீர் குலைக்க முயற்சிப்பதாக பெயர் குறிப்பிடாமல் தாக்குதல் தொடுத்தார். கிராமங்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாரம்பரியத்தை அமல்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்தார்.
அவர் மேலும் பேசுகையில், “கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். கடின உழைப்பு இருந்தபோதிலும், குறைந்த வளங்கள் காரணமாக கிராம மக்கள் பெரும்பாலும் வாய்ப்புகளை அணுக போராடுகிறார்கள்.

2014 முதல், ஒவ்வொரு கணமும் கிராமப்புற இந்தியாவுக்குச் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே எனது அரசின் முன்னுரிமை. கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது, இடம்பெயர்வதைத் தடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவது என்பதே எங்கள் பார்வை.
இதை அடைய, ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் செயல்திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் கிராம மக்கள் அதிகாரம் பெற வேண்டும், குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் கிராமத்திலேயே முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இதற்காக கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, 'பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை' மேலும் ஒரு வருடத்திற்குத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் டிஏபி விலை அதிகரித்து, விண்ணை தொடுகிறது. ஆனால் விவசாயியின் தலையில் சுமையை ஏற்ற மாட்டோம் என்று முடிவு செய்து மானியத்தை உயர்த்தி டிஏபி விலையை சீராக வைத்துள்ளோம். நமது அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவை புதிய ஆற்றலால் நிரப்புகின்றன.
நமது கிராமங்களில் விவசாயம் தவிர, பல்வேறு வகையான பாரம்பரிய கலைகள் மற்றும் திறன்கள் சார்ந்து பலர் வேலை செய்கிறார்கள். கிராமப்புற பொருளாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தத் திட்டம் நாட்டின் லட்சக்கணக்கான விஸ்வகர்மாக்கள் முன்னேற வாய்ப்பளிக்கிறது.
நமது அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவில் புதிய ஆற்றலைப் புகுத்துகின்றன.எங்கள் இலக்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளை வழங்குவது, அவர்கள் விவசாயம் செய்வதற்கும், அவர்களின் கிராமங்களுக்குள் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை அணுகுவதற்கும் உதவுவதாகும்.
இந்த தொலைநோக்கு பார்வையுடன், பி எம் கிசான் திட்டமானது விவசாயிகளுக்கு தோராயமாக ரூ. 3 லட்சம் கோடி நிதியுதவி அளித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் விவசாயக் கடன்களின் அளவு 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
முந்தைய அரசாங்கங்கள் எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேவைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. கிராமங்களில் இருந்து இடம்பெயர்தல் தொடர்ந்தது, வறுமை தொடர்ந்து அதிகரித்தது, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்தது. பல பத்தாண்டுகளாக அபிவிருத்தி இல்லாமல் இருந்த பகுதிகள் இப்போது சம உரிமைகளைப் பெற்றுள்ளன.” என தெரிவித்தார்.
விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி ஜந்தன் யோஜனா பிரதமர் முத்ரா மற்றும் பிரதமர் சுவாமி நிதி உள்ளிட்ட 16 அரசு திட்டங்களுக்கு வங்கிகள் சரிவூட்டல் இயக்கத்தை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அண்ணாமலையை நீக்கினால் தமிழக பாஜகவுக்கு பரலோகம்தான்..!’அதிர்ச்சி கிளப்பும் ஆதரவாளர்கள்..!