நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஒட்டப்பட்டுள்ள வரவேற்பு போஸ்டர் ஒன்று பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் வருங்கால தமிழக முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே வருக வருக'' என விஜய் புஸ்ஸி ஆனந்த் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் தயார் செய்து ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இதையும் படிங்க: விஜய்க்கு வைத்த வசூல் வெடிகுண்டு.. தேம்பி தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா..?
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே புஸ்ஸி ஆனன்ந்த் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த் தவெக கட்சியினரை நாய் மாதிரி நடத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ''தலைவர் விஜயைச் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்த்-ஐ 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய். ஆனால் விஜய்-க்கு பொதுச்செயலாளர் ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறி வருகின்றனர்.

தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கிற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட்டிற்கு இப்போது விலையை நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைமை தங்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடலாம் என்று பல நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் காத்திருக்க, சீட்டுக்கு விலையை நிர்ணயித்தது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்தின் நெருக்கமான ஒருவரிடம் வசூலிக்கும் இந்த பொறுப்பை கொடுத்ததாகவும் அவர் (சஜி)இறந்ததற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த் விழி பிதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், குறையாமல் கோடிகளில் பணம் கொடுத்தால் சீட்டு உறுதி என்கிற செய்தி தலைமை காதுக்கு சென்றால் சில பேருக்கு சீட்டு கிடைக்கலாம். இல்லையென்றால் கஷ்டம்தான். பணம் இருக்கிறவர்களுக்கு தான் சீட்டு கிடைக்கும் என்று புலம்பி வருகிறார்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

விஜய்யை கவர புஸ்ஸி ஆனந்த் நாடகம் நடத்துகிறார் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் இதனையொட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், புஸ்ஸி ஆனந்தை நான் வேண்டுமென்றே தப்பு சொல்லவில்லை. விஜயை புஸ்ஸி ஆனந்த் எப்படி ஏமாற்றுகிறார் என விஜயின் தந்தை பகிர்ந்துள்ளார்.
போகிற போக்கைப்பார்த்தால் விஜயை ஓரம்கட்டிவிட்டு புஸ்ஸி ஆனந்த் தவெகவை கைப்பற்றி முதல்வர் வேட்பாளர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.