தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது . இதே வேளையில் நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடத்த உள்ள தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .அதன் படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை
வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைவதற்குள் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட மறுத்துவிட்டதால், காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்குவதா அல்லது திமுகவே போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: “கனடாவை அமெரிக்காவுடன் இணைச்சிருங்க”: ஜஸ்டின் பதவி விலகியவுடன் சேட்டையைத் தொடங்கிய டிரம்ப்..