கடந்த ஆண்டு செப்டம்பரில் நாசா விண்வெளி வீர்ர நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகிய இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அப்போது, இந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்து வர ஏதுவாக இரண்டு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் 10 நாள் பயணமாக சென்றனர்.

ஆனால், விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களைப் பூமிக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகளை நாசா மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா உறுதிபட தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 16ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக நால்வரும் பூமிக்கு அழைத்து வரப்படுகின்றனர் என்றும் நாசா கூறியுள்ளது.
இதையும் படிங்க: 28000 கிமீ வேகமும்... 3000 டிகிரி வெப்பமும்... சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப முடியுமா..?