மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் டங்ஸ்டன் சுரங்க ஏலம் கொடுக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் வல்லாளபட்டி ஆகிய கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்களை நேற்று சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மத்திய அரசின் டங்ஸ்டன் திடத்தை செயல்படுத்த தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசுக்கு தெரிந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டங்ஸ்டனுக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால் தான் டங்ஸ்டன் சுரங்க ஏலம் கொடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இந்த திட்டத்தால் 1 ரூபாய் கூட வருமானம் கிடையாது. மாநில அரசுக்கு தான் வருவாய் இருக்கும். ம த்திய அரசு ஏலம் மட்டுமே கொடுக்கும் அதிகாரம் உண்டு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த பகுதியில் எங்குமே டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாத்தை அளிக்கிறோம். விரைவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார். மக்கள் மீது போடப்பட்ட வழக்கை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். . இந்த பகுதிகளில் EC எடுப்பதற்கான தடையை அரசு நீக்கி உள்ளது. அதற்கு நன்றி” என்றார்.

மேலும், இனி இது போல் ஏலம் வந்தால் சரியான பதிலை மாநில அரசு அளிக்க வேண்டும். அப்போது தான் குழப்பம் வராமல் தடுக்கலாம் மாநில அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் செயல்பட்டது.
பல்லுயிர் தளத்தை தவிர்த்து என்று மாநில அரசு குறிப்பிட்ட காரணத்தால் தான் மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். செப்டம்பரில் மாநில அரசு அளித்த geological survey அடிப்படையில் தான் மத்திய அரசு ஏலம் கொடுத்தது” என்றார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன? ...தர்காவுக்கு செல்ல அனுமதி மறுப்பா?..