விழுப்புரம், காகுப்பத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவருக்கு 25 வயதாகிறது. விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பஸ் நிறுத்தத்தில் மொபைல் போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் ஒருவர் வந்துள்ளார். அவர் தன்னஒ மகாராஜபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் எனவும் அறிமுகப்படுத்து கொண்டார். பழுதான தன் மொபைல் போனை சர்வீஸ் செய்து தரும்படி போனை கொடுத்துள்ளார். மொபைல் போனை வாங்கிப்பார்த்த ஜாகிர் உசேன், மொபைல் போன் சர்வீசுக்கு 800 ரூபாய் ஆகும் என கூறியுள்ளார்.

இதற்கு, என்னிடமா காசு கேற்கிறாய்? நான் யார் தெரியுமா? என்னிடம் காசு கேட்டால் கடையை குண்டு போட்டு அழிச்சிடுவேன் என அருண்குமார் மிரட்டி உள்ளார். ஆனால் இதை ஜாகிர் உசேன் பொருட்படுத்தவில்லை. காசு கொண்டு வந்து கொடுத்தால் சர்வீஸ் செய்து தருகிறேன். இல்லையென்றால் வேறு கடையை பார்த்துக்கொள் என கூறி விரட்டி உள்ளார். சரி எனக்கூறி அருண்குமாரும் போனை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!

இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு கடைக்கு வந்த அருண்குமார், மொபைல் போனை கேட்டார். அப்போது ஜாகிர் உசேனின் தம்பி ஷேக் அலாவுதீன் கடையில் இருந்தார். அவர், மொபைல் போனை சர்வீஸ் செய்ததற்கு 800 ரூபாய் தரும்படி அருண்குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு அருண்குமார், நான் அவ்வளவு சொல்லியும் எங்கிட்டியே பணம் கேட்கிறாயா.? நீ ஒண்ணும் சரிப்பட்டு வர மாட்ட. இரு வர்றேன்.. என்று கூறி சென்றார்.

சிறிது நேரத்தில் கடைக்கு திரும்பி வந்த அருண்குமார், கையில் எடுத்து வந்த இரண்டு பெட்ரோல் குண்டுகள் மற்றும் நாட்டு வெடியை அடுத்தடுத்து கடைக்குள் வீசினார். அவை கடையில் விழுந்து வெடித்து சிதறியது. இதனாக் மொபைல் போன் கடை தீப்பிடித்து எரிய துவங்கியது. அப்பகுதியே புகைமூட்டமானது. கடையில் இருந்த ஷேக் அலாவுதீன், தலைதெறிக்க ஓடி, அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தார். தீயில் கடையிலிருந்த மொபைல் போன்கள், உபகரணங்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் கூடுதல் எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கடையில் வெடிக்காமல் கிடந்த ஒரு பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அடிதடி வழக்குகளில் தொடர்புடைய அருண்குமார், போதையில் அங்குள்ள கடைகளில் அடிக்கடி தகராறு செய்வதும், மாமூல் வாங்குவதும், தெரியவந்தது.
இந்த வகையில் தான் மொபைல் போன் கடையிலும் பெட்ரோல் குண்டை அவர் வீசியுள்ளார். தனிப்படை போலீசார், அப்பகுதியில் போதையில் மட்டையாகி இருந்த அருண்குமாரை, இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழுக்கு தான் முன்னுரிமை..! ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி..!