இந்த அறிவிப்பை வெளியிட்டவர் மாநில அரசின் அமைச்சர் அந்தஸ்துக்கு சமமான பொறுப்பை வகித்து வந்தவர். தொடர்ந்து, மாநில அரசின் சமூக நலத்துறை அதிகாரி ஒருவர்அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிராமணர்கள் சங்கமான பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக பண்டிட் விஷ்ணு ராஜோரியா என்பவர் பதவி வகித்து வருகிறார். இது மாநில அமைச்சருக்கு சமமான பதவியாகும்.
இந்நிலையில் போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது-:
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி!

"நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் இந்துக்கள் அல்லாத மதவெறி பிடித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு பெரியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. இளைஞர்களிடம் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
கவனமாகக் கேளுங்கள், மக்களே!எதிர்கால தலைமுறையின் பாதுகாப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு. குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்று கொள்ளுமாறு நான் உங்களை (இளம் பிராமண தம்பதிகள்) வலியுறுத்துகிறேன்.
அப்படி பெற்றுக் கொள்பவர்களுக்கு பரசுராம் கல்யாண் வாரியம் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும். நான் தலைவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த வெகுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும்.
கல்விக்கான செலவு தற்போது அதிகமாக உள்ளதாக இளைஞர்கள் அடிக்கடி கூறுகின்றனர். அந்த செலவுகளை எப்படியாவது சமாளித்துக் கொள்ளுங்கள். ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் இருந்து பின் வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றும் நிலை வரும்."
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை எழுப்பியது. இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "ராஜோரியாவின் அறிக்கை வெறும் அறிவிப்பு தான்; இது மாநில அரசின் கொள்கைக்கு எதிரானது" என்று விளக்கம் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
"ஒருவருக்கு இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் இருந்தால் மட்டுமே மாநில அரசின் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மாநிலத்தின் சிவில் சர்வீசஸ் விதிகளின்படி 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த இரண்டுக்கும் மேற்பட்ட உயிருள்ள குழந்தைகளைக் கொண்ட எந்த ஒரு வேட்பாளரும் ஒரு சேவை அல்லது பதவிக்கு நியமனம் பெற தகுதியற்றவர்".
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.. திமுக வழியில் விஜய்!