டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசிய உரையை காண்போம்… பொது மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி கைப்பற்றி உள்ளதாக கூறினார். இந்த பணம் திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என கூறியுள்ளார். இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர் என்றும் கூறினார்.

சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது என்றும் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ED-யால் தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி... அவசர அவசரமாக டெல்லி பயணம்... திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

உலகம் இந்தியாவின் முயற்சிகள், புதுமைகளை மதிக்கிறது என்று கூறிய பிரதமர், இந்தியா உலக நாடுகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது என்றும் இன்று உலகம் இந்தியாவை உற்றுநோக்கி வருவதாகவும், கடந்த 70 ஆண்டுகளில் உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7-8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார். பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர்,. இது துவக்கம்தான், சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது என்று விவரித்துள்ளார்.

பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பேசிய அவர், இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத் துறை இதுவரை ரூ.22,000 கோடி பணத்தைக் கைப்பற்றி உள்ளது,. இந்தப் பணமானது திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துப்பாக்கி ஏந்திய போலீசுடன் எஸ்டிபிஐ நிர்வாகியின் கடைக்குள் புகுந்த ED... 1 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை...!