கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் கதிர் ஆனந்த் தொடர்புடைய 8 இடங்களில், நடத்தப்பட்ட சோதனையில், ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாகவும், கடந்த 3-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார்.

அவரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. நேற்று காலை 10.45 மணி அளவில் ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களை காண்பித்து அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சொத்துகள் வாங்கப்பட்டது வாங்கப்பட்டது தொடர்பாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
பல கேள்விகளுக்கும் பதிலளித்த கதிர் ஆனந்த், சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார். சில கேள்விகளுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். கதிர் ஆனந்த் அளித்த தகவல்களை அமலாக்கத்துறையினர் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்தனர். தேவைப்பட்டால், மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவரையும் திருக்குறளையும் ஆட்டையைப் போடும் திமுக கூட்டம்.. கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
இதையும் படிங்க: நா மட்டும் கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா? - சீமானை தெறிக்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி!