மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறி அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டினார். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என எச்சரித்தார்.
இதையும் படிங்க: போட்றா வெடிய... தமிழக பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன்... அண்ணாமலைக்கும் முக்கிய பொறுப்பு!

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அண்ணாமலை மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும், நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உஷாரான அமித் ஷா... 4 மணி நேரம் முன்னாடியே முக்கிய நபருடன் சந்திப்பு - காரணம் என்ன?