திருச்சி விமான நிலையத்தில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் 500அரசு பள்ளிகளில் இருக்கும் அடிப்படை , கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதை எதிர் கட்சிகள் , உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்றார்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும். அதேபோல் டெல்லியில் சட்டம் ஒழுங்கு, பாஜக கையில் உள்ளது, ஆனால் தலைநகரில் எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கி சூடு நடைபெற்ற வருகிறது, தலைநகரத்திலே மக்களுக்கு பாதுகாப்பில்லை.என்று பாஜக மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் மாநில அரசு நடவடிக்கை தீவிர படுத்த வேண்டும் என்றும் மாணவி பாலியல் புகாரில் திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜக அண்ணாமலை எழுப்பி வருகிறார் இது முற்றிலும் தவறானது எனவும் துரை வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாத்திகனாக மாறியதும் லைஃப் ஜாலியா இருக்கு ..நடிகர் சத்யராஜ் பேச்சு