''இனி ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில், அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்துள்ளார். பாஜகவின் பல்வேறு மசோதாக்களை திட்டங்களை எதிர்த்து கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில் மவுனமாக அமர்ந்து பாஜகவுடன் கூட்டணியை ஏற்றுக் கொண்டார்.

அதிமுக - பாஜகவினர் பிரிந்து விட்டாலும், தொடர்பில் தான் இருக்கின்றனர். மீண்டும் அவர்களின் கூட்டணி உருவாகும் என, முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியது உண்மை என்பது நிருபணமாகி உள்ளது. காசி தமிழ் சங்கம் நடத்தியது மிகப் பெரிய தொண்டு என பாஜகவினர் சொல்கின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!
தமிழ் காசிக்கு செய்யக் கூடிய நன்மையாக, நாம் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனால் தமிழ் எப்படி வளர்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. சமஸ்கிருதம் மொழிக்கு 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால், தமிழை வளர்க்கிறோம் என சொல்கிற பாஜகவினர் தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட செலவு செய்யவில்லை. இப்படி பாரபட்சமாக மத்திய அரசின் ஆட்சி நடக்கிறது.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்க நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. இப்படி ஒரு ஆட்சியில், தமிழ் வளர்ச்சிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும். பிரதமர் எங்கேயாவது செல்லும்போது, திருக்குறளை சொல்வதும், மத்திய நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதையும், தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது.
யாரோ ஒருவர் கூட்டணி அறிவிக்க பழனிசாமி கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ அவர்கள் தான் கூட்டணியை அறிவிக்க வேண்டும். ஆனால், அந்த மேடையில் பேசுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லாத நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி அறிவிக்கப்படுகிறது.

அதிமுக தலைவர்களை எல்லாம் இழிவாக பேசக்கூடிய பாஜக தலைவர்களை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து அளிக்க வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இது கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் செய்துள்ள மிகப்பெரிய துரோகம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு, தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்'' எனத் தெரிவித்து இருந்தார் கனிமொழி.
இதற்கு பதிலடி கொடுத்து வரும் அதிமுக நிர்வாகிகள், ''தமிழகத்தில் மதுவால் விதவைகள் அதிகம் என சொன்ன கனிமொழிக்கு, மதுவிலக்கு கொண்டு வர இயலாது போது, இதை பேச என்ன யோக்கிதை இருக்கிறது. வாரிசு அரசியல் என்ற நிலையில் எம்பி ஆனால் மட்டுமே தலைமை பண்புக்கு இவர் ஏற்புடையவர் அல்ல. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இன்று வரை காங்கிரஸோடு ஒட்டுண்ணி போல் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுக பெண் நிர்வாகி பேச்சு எவ்வளவு மலிவானதாக இருக்கிறது பாருங்கள்'' என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்போ பொன்முடி; இப்போ துரைமுருகன்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் திமுக அமைச்சர்கள்!!